lundi 13 avril 2015

"பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13)."

கவி மலர்



                                                                  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்



 பட்டுக்கோட்டை மணிமண்டப மன்னவனே
பாட்டுக்கோட்டை துணிவுமிக்கத் தூயவனே
பாட்டாளி வர்க்கத்தின் திராவிட தீக்கதிரே
ஏடெடுத்து பயிலாத பாமரனே நின்புகழ் வாழி!


மக்கள் தமிழ் படைத்திட்ட பாட்டாளியிவன்
மக்கள்திலகம் அரியணையின் நாற்காலியிவன்
நாட்டிலுள்ள நல்லவர்களின் கூட்டாளியிவன்
வாட்டிடும் வறுமையின் போராளியிவன்-வாழி!


பாசவலையில் பாடல் படைத்திட்ட கவிஞன்
பாடுபட்டு செய்த தொழில் பதினேழு
ஓடாக தேய்ந்ததுவே அவன் தேகம்
முப்பதுக்குள் முடிந்ததுதான் நம் சோகம்!


புரட்சிக்கவி பாரதிதாசனார் அருஞ்சீடன்
அகல்யா வடிவெடுத்த அருங் கவிஞன்
அரசுடமை பெற்ற அவனரும் பாடலை
பரமசுகம் பெற்றே பாடுவோம் வாரீர்! 
(மீள் பதிவு) 

புதுவை வேலு



"பட்டுக்கோட்டையார்"

இவரது நினைவைப் போற்றும் வகையில் அமைந்த
"மறக்க முடியுமா?"
காணொளியை  கண்ணுக்கு இனிமையாகவும்,
கருத்துக் காவியமாகவும், இந்த இனிய நன்னாளில்,
பட்டுக்கோட்டையார் பிறந்த நாளில் (ஏப்ரல் 13) 
கண்டு மகிழ்வோமே!!!!




நன்றி: யூ டியூப் (you tube)

21 commentaires:

  1. Réponses
    1. பட்டுக்கோட்டையார் புகழுக்கு முதல் மரியாதை
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வசதி படைத்தவன் தரமாட்டான் ,வயிறு பசித்தவன் விட மாட்டான் என்று பொது உடைமைக் கொள்கையை படம் பிடித்துக் காட்டிய அற்புத கவி பட்டுக் கோட்டையார்:)

    RépondreSupprimer
    Réponses
    1. வசதி படைத்தவன் தரமாட்டான்
      உண்மை ஜி!
      த ம ஓட்டைக் கூட தர வில்லையே?
      பட்டுக் கோட்டையார் பதிவுக்கு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. சித்திரை புத்தாண்டின் புகழ்மிகு வாழ்த்துகள் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்
    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க’

    போன்ற மறக்க முடியாத,காலத்தில் கரையாத , பாடல்களைத் தந்த ப(பா)ட்டுக்கோட்டையாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல கருத்தினை நட்புடன் நாடி வந்து நவின்ற விதம்
      வெகு சிறப்பு! நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. உழவின் அருமை பெருமைகளை சொன்னதை மறக்க முடியுமா....?

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ் சிறக்க
      பாட்டு எழுதிய பட்டுக் கோட்டையாரை
      மறக்க முடியுமா?
      நன்றி வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வணக்கம்
    ஐயா

    நினைவு படுத்தி பதிவாக எழுதியமைக்கு நன்றி ஐயா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. சித்திரை புத்தாண்டின் புகழ்மிகு வாழ்த்துகள் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமையான பதிவு! அருமையான பாடல் ஆசிரியர்...

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல கருத்தினை நட்புடன் நாடி வந்து நவின்ற விதம்
      வெகு சிறப்பு! நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பட்டுக்கோட்டையார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!..

    RépondreSupprimer
  9. பட்டுக்கோட்டையாரின் புகழுக்கு
    இந்நாளில் உரிய மரியாதை செய்தமைக்கு,
    பதிவுக்கு சிறப்பு செய்தமைக்கு பண்புமிகு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. சிறப்பான பதிவு....... நன்றி.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. சித்திரை புத்தாண்டின் புகழ்மிகு வாழ்த்துகள் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. கவிதையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை பற்றி சொல்லிவிட்டீர்கள். காணொளி மிகவும் அருமை. நன்று புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer

  12. உழவின் அருமை பெருமைகளை சொல்லிய வண்ணம்,
    தமிழ் சிறக்க பாட்டு எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை!
    மறக்க முடியுமா?
    நண்பர் சத்தியா அவர்களே!

    கவிதை பற்றி சிறப்பித்தும், காணொளியை கண்டும்,
    கவின்மிகு கருத்தினை வழங்கியமைக்கு,
    வளமான நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. முத்து நிலவன் பதிவில் அனானி OPTION இல்லாததால் கக்கன் மகன் பற்றி,,,,,

    Children: He had five sons and one daughter. Eldest son Mr P K Padmanthan served the Tamil Nadu Government as President and Registrar of Cooperative societies. Mr Kakkan refused to to make any recommendation when his son appeared for the TN Public service commission. He was married to Prof. V S Krishnakumari who is a Paediatrcian and worked as the Director of Institute of Child Health Egmore, Chennai.[14] His Eldest daughter Mrs Meenakshi Vijayakumar [15] is a currently the deputy Director in TN fire Services. She is one of the two woman fire officers recruited in Fire service in the country. His second Daughter Dr Shanthi Krishnan MRCGP MRCOG works in UK for National Health Service.

    His Second Son Mr P K Pakkiyanathan worked for Simpson's Chennai. His third Son Mr P K Kasiviswanathan was an IPS officer worked as Assistant commissioner of Police in Madurai. His Fourth and fifth sons Dr P K Sathiayanathan, Dr P K Nadarajamoorthy both were doctors in Chennai.

    His only daughter Mrs Kasthuri Sivasamy was involved in state Politics. Her Husband Mr Sivasamy is a Retired Chief Engineer at Port Blair Andaman. Their Second Daughter Mrs Rajeshwari is an IPS officer and Assistant Commissioner of Police in Trichy.



    RépondreSupprimer