dimanche 8 juin 2014
கண்ணன் கருணை
" கர்மண்யே வாதி காரஸ்த்தே
மா பலேஷீ கதாதன "
கீதையின் நாயகன் கண்ணபிரான் உபதேசித்த உத்தம வரிகள் இவை !
கடமையை செய் ! பலனை எதிர்பார்த்து காத்திருக்காதே ! என்பதுதான் இதன் கருத்துரை. மானிட பிறவி என்பது கிடைப்பதற்கரிய ஒரு மகத்தான அற்புத பிறவி என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.
தற்போதைய சூழலில் இப்பிறவி எடுத்த சிலரது மனங்களில் ஆசை அலைகள் ஆர்ப்பரித்து அலைகடலாய் உருவெடுத்து காணப்படுகிறது. இது வேதனைக்கு வேர் வைப்பதாகவே அமையும் என்பது உலகறிந்த உண்மையாகும் ! மனம் என்னும் கடலில் ஆசை என்னும் அலைகள் தறிக்கெட்டு சீற்றம் கொண்டு பெருங்காற்றோடு பெருக்கெடுத்து ஓடி வருமே ஆயின் நாமெல்லாம் சுழன்று வரும் ஆசை சுனாமிக்குள் சுருண்டு விடுவோம் என்பதை ஓர் நிமிடமாவது நாம் நினைவில் கொண்டால்..." அந்த ஓர் நிமிடம் " அர்த்தமுள்ள நிமிடமாக மட்டுமல்லாமல்... வளமான நம் வாழ்க்கைக்கு நன்மைகளை மட்டுமே நலமான பரிசாக நாம் பெறலாம் ! இது சத்தியம் !!
சத்தியமே ஜெயம் !
- யாதவன் வேலு
கடமையை செய் ! பலனை எதிர்பார்த்து காத்திருக்காதே ! //
RépondreSupprimerஆம் அப்படி இருந்து அவன் தாளில் சரணாகதம் அடைந்திருந்தால்...அவனே எல்லாம் பார்த்துக் கொள்வான்.
நன்றி சகோ
வணக்கம்
Supprimerதங்களது முத்தாய்ப்பான கருத்தை குழலின்னிசயின் பொக்கிஷ பெட்டகத்தில் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உன்னத வரிகள்...
RépondreSupprimerவணக்கம் நண்பரே
Supprimerதங்களது முத்தாய்ப்பான கருத்தை குழலின்னிசயின் பொக்கிஷ பெட்டகத்தில் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறந்த வழிகாட்டல்
RépondreSupprimerதொடருங்கள்
வணக்கம்
Supprimerதங்களது முத்தாய்ப்பான கருத்தை குழலின்னிசயின் பொக்கிஷ பெட்டகத்தில் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு