mercredi 5 juillet 2017

ஐந்துவிரல்களில் ஐங்குறுநூறு



வெட்கத்தின் வெளிச்ச மிங்கு
வெள்ளி நிலவில் மிளிருதடி
சொல்லின் எண்ண மிங்கு
தேன் கிண்ணத்தை சுவைக்குதடி


அல்லித்தண்டு ஐந்துவிரல்களில்
ஐங்குறுநூறு படிக்குதடி!
மூன்றடி சிற்றெல்லை ஆறடி பேரெல்லைக்குள்
அடங்கி அருங்கவி வடிக்குதடி!


முல்லைத் திணை முகில்வண்ணன்
முன்னேவந்து முழங்கை பற்றுதடி!
எல்லையோடு ஏற்றக் காதல்
முல்லைப் பூவாய் மணக்குமடி


இராதைக்கேற்ற கண்ணன் கானம்
இரவிலும் இனிமை சேர்க்குமடி!
இமை மூடாத இளம் விழிகள்
ஊமை விழியாய் உன்னைக் காணுதடி.


-புதுவை வேலு

dimanche 2 juillet 2017

நன்றியுடன் நாமாவோம்



நாலடியில் நற்றமிழில் சொல்லெடுத்து நற்கவிதை :-



உள்ளம் சிலிர்க்குது
வெல்லமாய் இனிக்குது
'ஒற்றுமை' ஓர் குடையில்
...
ஓங்கி ஒதுங்கி ஒலிக்குது.




மழை நடத்தும்
சமத்துவப் பாடம்
நனையாது கேட்கிறார்
நன்றி யாளராடு!



இயற்கை மழை
கொடை தந்தது!
இதயங்கள் ஓர் குடையில்
இணைந்து நின்றது.



நன்றி!
நாயின் நற்குணம்
வென்றிடும் !
இளஞ்சிறார் நல்மனம்.



உயிர் விதைக்கும்
சமத்துவப் பயிர்கள்
காக்கின்றது
கறுப்புக் குடை!



ஆனந்த மழை பொழியுது
அன்பு மழை மொழியுது
ஆராதணை அழகு மிளிருது
ஆதரவுக் கரம் துளிருது!



குணம் குடையானது
மனம் கோபுரமானது
இனம் வேறுஆயினும்
அன்பு பொதுவானது.



தாலாட்டும் மழையும்
கோலாட்டம் போடுதோ?
வாலாட்டும் நாயும் 
பூந்தளிரோடு நட்புக்கூடுதோ?



சூழ்ச்சியற்ற சுடர் மழை
சூழ வலம் வந்து -குடையுடன்
தாழாத தத்துவப் பாடம்
தகைமையோடு நடத்துதப்பா!



நன்றியுடன் நாமாவோம்
நட்புக்குள் பூவாவோம்
நல்லோருடன் நாமாவோம்
ஐப்பூதம் நாயகன் அருளோடு!!!
  


-புதுவை வேலு