samedi 31 décembre 2016

"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்  - 2017"


அன்பு நல் உள்ளங்களுக்கு,

"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்  - 2017"




நட்புடன்,
புதுவை வேலு




dimanche 9 octobre 2016

இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி" நல்வாழ்த்துகள்


வலைப் பூக்கள் வடிக்கும்- தேன்
கலை பாக்கள் தொடுக்கும்
விலை மதிப்பில்லாத -புகழ்
மலைபோல் உயர்ந்து நிற்கும்
நிலை தாழாத  - தமிழ் ஓலை
தமிழுக்கு சாற்றும்
அன்பு நட்புறவுகளுக்கு,


இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி"
நல்வாழ்த்துகள்



நட்புடன்,
புதுவை வேலு

http://kuzhalinnisai.blogspot.fr/

http://kuzhalinnisai.blogspot.fr/2015/10/blog-post_20.html




கலைவாணி அருள்வாய் நீ!




கலைவாணி அருள்வாய் நீ!!!

வீணை மடி யேந்தி கல்வி
யானை பிடி யேறி வருவாள்
தேனமு தாய் தமிழை  தருவாள்
உனை  பணிவோம் கலை வாணி!



வானை வசப் படுத்தும் அறிவு
வினை தீர்க்கும் வித்தக பரிவு!
திணை ஐந்தும் போற்றும் தேவி
நினைவோம் நா மகளை வேண்டி!



கீழ்  கூத்தானூர் கோயில் நாயகி
வீழா! தாழா! நிலை கல்விதேவி
வெள்ளைத் தாமரை மலரின் மகளே
கொள்ளையின்பம் செழிக்க நீ! வருக!



எல்லை யில்லா ஏட்டறிவுப்  பெட்டகம்
கல்லும் கசிந்துருகும் காவியத்  தடாகம்
வெல்லும் வெள்ளையாடை  வெற்றி தேவி
துள்ளும் மானாய் விரைந்தே வருக!



அல்லும் பகலும் அருந்தும் அருந்தமிழே!
அகிலத்தின் அமுதே  கலை மகளே!


ஆயக் கலை அரசி கலைவாணி
தேயாத நிலவாய் அருள்வாய் நீ!


 புதுவை வேலு

vendredi 7 octobre 2016

"மீண்ட சொர்க்கம்" (ஒரு நிமிடக் கதை)



 என்ன ஆச்சு! ஏன் வேலையை விட்டுட்டு இங்கே வந்துட்டீங்க!
இந்த கேள்விக்கான பதிலை தேடி தேடி தேய்பிறை நிலவாய் வாடியபடி வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான் வசந்த்.

வேலையில் இருக்கும் வரை மதிப்போடு மார்க் போட்டு மரியாதை செய்த சமூகம்
கை விட்டுப் போய் கைம்பெண்ணாய்
வந்தவளை பார்ப்பது போல்  ஏளனப் பார்வையால்....
பார்ப்பவர்களை காணும்போது,

 "அக்னிக்கு அரஸ்ட் வாரண்ட்" வாங்கி வந்தவர்களாகவே
வசந்த் கண்களுக்கு பட்டது.

ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கும் ஒருவிதமான காரண காரியங்கள் இருக்கத்தான் செய்யும்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடியே....
வலை தளம் சென்று,
பதிவுகளை படித்தபடியே இருந்தான்.
அப்போது அவனது கண்களில் பட்டது ஒரு தலைப்பு

அது!

பூமாலை வாங்கி வந்தான்! பூக்கள் இல்லையே"

ஆமாம்,

அருமை! என்று பின்னூட்டம் இட்டுவிட்டு பெருமையோடு பார்த்தான்
சுவரில் மாட்டி இருந்த அந்த வாசகத்தை.....

" இதுவும் கடந்து போகும்"


நம்பிக்கை நாதம் நறுமலராய் பூத்தது.

வசந்த்க்கு வசந்த கால வேலை மீண்டும் வராமலா போகும்?

வாழ்த்துகள் சொல்ல வருங்காலம் வரும்!

விரைவில்......

புதுவை வேலு

jeudi 6 octobre 2016

"நம்பிக்கை நாதம்"



துயர் துடைக்கத் துணை எதற்கு?
தும்பிக்கைத்  துணை இருக்க எனக்கு!
பிளிறும் சக்தி எனக்குள்  இருந்து
களிறு என்ற பெயர் பெற்றேன்.

ஆண்மகன் அழுவது தகுமோ பிடியே!
அழுகை அல்ல இது! ஆனந்தக் கண்ணீர்
தொழுகை செய்தேன் இறைவனை வேண்டி
பழுதின்றி காவிரியை  பகிர்ந்து தருக!


நம்பிக்கை நாதம் நலம்  பெறவே
தும்பிக்கை இறைவா துணைசெய்!
 

புதுவை வேலு

mardi 4 octobre 2016

அருட்பெருஞ்சோதி வள்ளலார்



 

ஒளிரும் ஒளிக்குள் ஒன்றான ஓங்காரம்
ஒலிக்கும்  திசையெட்டும் திரு அருட்பா
உளியோடு உறவாடும் கற் சிலையும்
களிப்பில் கரையாதோ ஓதுதலாலே!

துயர் நீக்கும் அருமருந்தே அருட்பா
பயிர் செழிக்க வரும்   நன்மழையே!
வயிறு பசித்திருக்க, விழி விழித்திருக்க,
மெய் தனித்திருக்க,  வாழியவே!  

வடலூர் வள்ளலார் தாள் வாழி
மடல் சிறக்க வரும் பா வாழி!
அணையா ஜோதி அருள் வடிவே
உனையே போற்றினோம் வாழியவே


புதுவை வேலு





lundi 3 octobre 2016

"வெண்மைப் புரட்சி வெட்கத்தில் சிவக்கட்டும்"





நீருக்கு நிழலாடை
உடுத்தியதோ?
நீல வண்ணம்.


வெள்ளி நிலவின்
வெளிச்சம் பட்டு
வெளிர்ந்ததோ?


இரு பறவைகள்...

தேகத்தின் ஆடை!
வெண்ணிறாடையாக!!!


இனி...

வெண்மைப் புரட்சி
வெட்கத்திலாவது
சிவக்கட்டும்.


புதுவை வேலு

jeudi 29 septembre 2016

"திருமலை தனிலே தவ சுப்ரபாதம்"


 மயக்கத்தை தந்த மாயக் கண்ணனின்  பாடல் இது!
கண்ணனின் லீலைகளை...
கண்ணனின் தாசன்   அழகு தமிழில் அள்ளித் தந்த பாடல் இது!
எழுத்து வடிவில் படிப்போம்
எழுதியவரின் தமிழை நாம் சுவைப்போம்.


கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை


நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை


கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


  
                                                               
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்


காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே


கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்


குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்


திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்



படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்

lundi 26 septembre 2016

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"



அழகின் சிரிப்பே!
உழவின் சிறப்பை....
பொன் விளையும் பூமிக்குள்
விதைத்தவன்

விவசாயி!


புதுவை வேலு

dimanche 25 septembre 2016

"உலகுக்கு உரக்க சொல்லி விடு!"


 


மண்ணின் மடி தேடி!
மண்ணுக்குள் வைரமாக...
எண்ணிய இடியரசன்

இவன் தானோ?

விண்ணின் வியாசா!
வான்மழையை நிறுத்தும்
உன் மந்திரத்தை...
 
உலகுக்கு உரக்க சொல்கிறாயோ?


புதுவை வேலு
 

நன்றி:புகைப்பட வித்தகர் புலிவலம் ரவி

jeudi 15 septembre 2016

"புரட்சித்தலைவருக்கு புதுவை வேலுவின் புகழ்மாலை"






'பிரான்சு எம் ஜி ஆர் பேரவையில்'

எம்ஜிஆர் விழா- 2016



மனிதப் புனிதர் எம்ஜிஆர்
இவர்
புவி போற்றும் பூவிதழ் கண்ணன்
திரைப் பூக்களின்...
மன்னாதி மன்னன்

புகழ் மணக்கும்
புதுமைப் பித்தரை
சுரும்பாற் கோதையின்
கரும்பாய் இனிக்கும்
நறுந்தமிழால் - "ராமரின்"
எம்ஜி ராமச்சந்திரரின்
திருப் புகழை,
'பிரான்சு எம் ஜி ஆர் பேரவையில்'
புதுவை வேலு
போற்றுகிறேன்!
பனிவன்புடன் பாமாலை
சாற்றுகிறேன்.





அன்னைத் தமிழே!
அன்னமிட்டவரின் முகமோ
'ஆசைமுகம்'
அவர்!
மண்ணைவிட்டு விண்ணை அடைந்தாலும்,
உன்னை,
என்னை,
தமிழ் மண்ணை மறவாத...
உலகத் தமிழ் ரசிகர்கள் உதிரத்தில்
இரண்டறக் கலந்துவிட்ட
உயிரினும் மேலான...
இரத்தத்தின் இரத்தம்.


"உழைக்கும் தோழர்களே ஒன்றுக் கூடுங்கள்!
 உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்" - என்று

உலகத்தை தமிழர்களின்
திலகமாக்கி மகிழந்தவர்
இறவாப் புகழ் 'இதயக்கனி'
எம்ஜிஆர்!


மகிழ்ச்சி!!!
மக்கள்...
'திலகம் இடுகையிலே'
மகிழ்ச்சி.


மகிழ்ச்சி!
மக்கள் திலகம் -புகழ்
கவி பாடுகையிலே!
மட்டற்ற மகிழ்ச்சி!


தமிழ் உறவுகளே!
தரணியில்...
சிறகுகள் இல்லாமல்
பறவைகள் இல்லை!

திறமைகள் இல்லாமல்
திரை உலகில்
எவர் தொடுவார் வெற்றியின் எல்லை?


"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"

தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.


பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?


"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
"பாசவலை" படத்தில் எழுதிய....

"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்

குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்

தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்

சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"

உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா? 

-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்.







கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!


அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.


நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!


இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.


தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!


"இருந்தாலும் மறைந்தாலும்,
 பேர் சொல்ல வேண்டும்!
 இவர் போல யாரென்று

 ஊர் சொல்ல வேண்டும்"

போர்!!! 

போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.


எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை  எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே   சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!


ஆரம்ப நாட்களில்...
திரைவானில் மின்னிய
எம்ஜி ராம் சந்தர் - என்னும் நட்சத்திரத்தை
எம்ஜி ராமச்சந்திரன் -என்று
பெயர் மாற்றம் செய்தவர் யார் தெரியுமா?


அறிஞர் அண்ணாவின்,
ஓர் இரவு/ வேலைக்காரி கதைகளை,
நாடகமாக்கிய "நடிப்பிசைப் புலவர்"
கே.ஆர். ராமசாமி அவர்கள்.


அதனால்தன்,
சென்னையில் உள்ள பதினொரு மாடி
அரசுக் கட்டிடத்துக்கு,
கே.ஆர். ராமசாமி மாளிகை என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர்!


தனது பெயரை மாற்றியமைத்தவருக்கு,
பெயரை சூட்டி மகிழ்ந்த

சுந்தர புருஷர் எம்ஜிஆர்!


பிறர் துன்பம் கண்டால்
தூணாக துணை நிற்பார்
தூமணி மாடத்து மணிபுறா
'மாடப் புறா'  எம்ஜிஆர்.


நாகர்கோயிலில் கலவாணர் என் எஸ் கே,
சென்னையில் நடிகை கண்ணாம்பா / நாகேஷ்
சுருளிராஜன், எஸ்.வி.சுப்பையா, கவியரசு கண்ணதாசன்,
டி.ஆர். ராமண்ணா, ஐசரி வேலன் போன்ற

சக நட்சத்திரங்களின் வீடுகள்
ஏலம் போனபோது அவைகளை மீட்டுத் தந்த
'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியர்'

எம்ஜிஆர்.


இவர்!
கேட்டு கொடுப்பதைவிட,
கேளாது கொடுக்கும் கொடை மகன்.


மடை திறந்து ராஜ நடை போடும் மகாநதி!

கடைக் கண்ணால் காரியம் ஆற்றும்
காவிய த் தலைவர்.


நட்டாற்றில் நிற்கும் நலிந்தவரை கரை சேர்க்கும்
'படகோட்டி'



செம்மொழியாம்....
செந்தமிழை செதுக்கி

கவி புனைந்த  "பாரதிக்கு"
சிலை எடுத்த கலை சாரதி,
கலவாணியின் அருள் பெற்ற சாரதி
எம்ஜிஆர்.


வறுமையின் பிடியில் வளர்ந்து,
படிப்படியே  உழைப்பால் உயரந்த,
'தொழிலாளி'.


அயல்நாட்டில் இருந்தபடியே
தனது,
வெற்றி மயிலை
தமிழகத் தேர்தலின்போது
தோகை விரித்தாடச் செய்த மாயவர்.

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தாலும்
மீண்டும்
துளிர்விட்டு பூத்த முல்லைப் பூ!
மறு அவதாரப் புருஷர்
'மர்மயோகி' எம்ஜிஆர்.


பரங்கிமலையை...
வெற்றி கிரிவலம் வந்த
பௌர்ணமி நிலவு எம்ஜிஆர்.


பருவங்கள்  பல வந்தாலும் -வாழ்வு
பயனற்றே போகும்,
வள்ளல் குணம் போற்றாவிடில்!!!


சருகான பயிரும் தழைக்கும்
உருகாத பொன்மேனியார் சதிராடும்
எம்ஜிஆர் விழிபட்ட ஒருபோதிலே!!


முயற்சிக்கு வெற்றி
முப்பொழுதும் உண்டு - அதை
அயற்சி அடையாது...
பயிற்சியாக பருகுவோர் -தம்
'உழைக்கும் கரங்களில்' தழைக்கும்
வெற்றி என்னும் மலர்ச் செண்டு!

எடுத்துக் காட்டி வாழ்ந்த
வீழாத வித்தகர் எம்ஜி ஆர்!





ஆட்சிப்பீடம் என்பது,
எப்படி இருக்க வேண்டும்
-என்பதை....
அன்றே!
"குலே பகாவலியில்"
படம் பிடித்துக் காட்டிய
'ஒளி விளக்கு' எம்ஜிஆர்.

இதோ!
மக்களின் உதவி என்னும் நூலைக் கொண்டுதான்

பதவி என்னும் பட்டம் வானாளவப் பறக்க வேண்டும்

நிலையான செங்கோல்!


நேர்மையான ஆட்சி!


இவைதான் முழுமையான ஆட்சிப்பீடம் என்றும்,


ஆண்/பெண் வித்தியாசம் ஆட்சிப் பீடத்துக்கு இல்லை
(புரட்சித் தலைவியின் ஆட்சிக்கு அன்றே  ஆருடம் சொல்லி விட்டார்
எம்ஜிஆர் போலும்)

அர்த்தமுள்ள ஆட்சிக்கும் மாட்சிமை பொருந்திய விளக்கம் காட்டிய...
'கலங்கரை விளக்கம்' எம்ஜி ஆர்.

அதியமான் ஔவைக்கு தந்ததோ
அரிய சிறப்புடைய நெல்லிக்கனி
அதுபோல்!
தன்னிடமிருந்த 'இதயக்கனி'யான
தமிழ் கலைக் களஞ்சியத்தை
தஞ்சை 'ராமையா தாஸ்'க்கு வழங்கிய
எட்டாவது வள்ளல் எம்ஜிஆர்!


கல்விக் கூடங்களில்
பசி பட்டினியோடு
இனி!
கல்லாமை இல்லை என்று நல்லாண்மையோடு,
நாட்டுக்கு சத்துணவுத் திட்டம் போன்றவற்றை
பாடத் திட்டங்களாக்கித் தந்தவர்,
சென்னைப் பல்கலைக் கழகத்தின்

சிறப்பு
டாக்டர் பட்டம் பெற்ற எம்ஜி ஆர்.


வாத்தியார் எம்ஜிஆர்

கவியரசர் கண்ணதாசன் பாடல்களில்
சில வார்த்தைகளை...
மாற்றம்  செய்ய வேண்டி  எம்ஜிஆர்  கேட்பதுண்டு
அப்பொழுது கண்ணதாசன் அவர்களோ!
வாத்தியார் ஆயிற்றே  அவர் திருத்தம் செய்யத் தான் செய்வார் என்றும்,
வாத்தியார் என்று மக்கள் எம்ஜிஆரை அழைப்பதற்கான காரணத்தையும்  அவர் வேடிக்கையாக சொன்னதுண்டு.



இதய தெய்வம் எம்ஜிஆர் - இவர்
தாய்மையின் சிறப்பை பொய்மை கலவாது....
மெய்யுரைத்த...
பொதிகை மலைத் தென்றல்
அதியமான் வழித் தோன்றல்.


பாரத ரத்னா எம்ஜிஆர் குறித்து
பிரபல  எழுத்தாளர்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
பகிர்ந்தளித்த செய்தி!


"ஒருமுறை திருப்பத்தூரில் மாபெரும்
பொதுக் கூட்டம் திரும்பிய பக்கமெல்லாம்
மக்கள் வெள்ளம்.


ஆண்களும், பெண்களும் அலை கடலென திரண்டு வந்திருந்தனர்.

அப்போது தன்னை தரிசனம் காண வந்த மக்கள் மீது எம்ஜிஆர் கரிசனம் கொண்ட காட்சி
அப்பப்பா!

அது கண்கொள்ளா கவின்மிகு காட்சி என்கிறார்.

அதாவது கூட்டம் முடியும் நேரத்தில், பொதுமக்களை பார்த்து, எம்ஜிஆர் அவர்கள்,
ஆண்களுக்கு மட்டும் நான் ஒரு செய்தி சொல்ல போகிறேன். ஆகையால் ஆண்கள் மட்டும் நில்லுங்கள். தயவுசெய்து பெண்கள்

(தாய்க் குலங்கள்) கூட்டத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என்றார்.

பிறகு ஆண்கள்  மட்டும் அங்கேயே இருப்பதை பார்த்த எம்ஜிஆர்.
காத்திருந்தமைக்கு மிக்க நன்றி!
இப்போது நீங்களும் இங்கிருந்து செல்லலாம். கூட்டம் முடிந்து விட்டது என்றார்.


பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்,

அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அல்லல்
படக் கூடாது என்பதை எண்ணிப் பார்த்து
எம்ஜிஆர் அவ்வாறு சொல்லியதை
பார்க்கும்போது, தாய்மைக்கு அவர் தரும் முக்கியத்துவம் தெரிகிறது. 

எம்ஜிஆரின் தொலை நோக்குப் பார்வை:-

வருங்காலம் வாழ்வாதாரம் நதி தானய்யா
(காவிரி)
வரும் காலம் தமிழகத்துக்கு எப்போதய்யா?
கர்நாடகம்!
தரும் காலம் வருமோ? இனி சொல்லுமய்யா!
அரும்பாட்டில் அன்றே அமரர் அருளினாராய்யா!


"காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது!
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே!
பிரிவு மாறி உலகில் ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே"


"நதிநீர் இணைப்பு"க்கு

'உரிமைக் குரல்' தந்தவர்
குறள் போற்றும் குணமுடைய,

எம்ஜிஆர் அவர்கள்.

அழகின் சிரிப்பே!
உழவின் சிறப்பை....
பொன் விளையும் பூமிக்கு
விதைத்த விவசாயி!


மக்காளின் பசிப் பட்டினியை
போக்கியதாலோ?
மாற்றுக் கிட்னி - உமக்கு
மருந்தாய் கிடைத்தது.



தர்மம் தலைக் காக்கும் என்பதை,
தாய் சொல்லை தட்டாது சொன்ன,
தாயைக் காத்த தனையனே!

நீங்கள்!
இராமாவரம் தோட்டத்தின் ...

இறவாப் புகழ் மலர்.

தற்போது "புனிதராக" மாண்பினை அடைந்த அன்னை தெரேசா அவர்களுக்கு,
அவர்கள் பெயரில் "பல்கலைக் கழகம்" உருவாக்கிய உன்னத உள்ளம் கொண்டவர் எம்ஜிஆர்.


தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம்

தஞ்சை பெரிய கோவிலை சீரமைத்த சீராளர்!

உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில்   அரங்கேற்றிய அறங்காவலர்.

ஒருவர் மட்டுமே ஓட்டிச் செல்வதாய் இருந்த
மிதி வண்டியை...
(டபுள்ஸ்)
இருவர் செல்ல அனுமதி அளித்து
அதனை
'காதல் வாகனம்' ஆக்கிய கருணை வேந்தர்.


வாடிய உள்ளங்களுக்கு,
தான் தேடிய செல்வத்தை,
அவர்களை நாடி அளித்த 'நாடோடி மன்னன்'.


இலவச சீருடை/இலவசக் காலணி
இரண்டையும் மாணவ/மாணவியருக்கு
"பரிசு" அளித்த மக்கள் முதல்வர்.


 கர்மவீரர் காமராஜர்  பெயரில்,
அவரது பிறந்த நாளில்,
விருது நகரை தலை நகராக கொண்டு ,
"காமராஜர் மாவட்டம்"

என்று புதியதாய்,
ஒரு மாவட்டத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்.



வெள்ளிதிரையில் புரட்சி நடிகருக்கு,
உதட்டின் கீழ் குருதி கண்ட பின்புதான்
கூண்டுக்கிளியாய் அடைப் பட்டிருந்த
அவரது குரோதம் கூண்டை விட்டு வெளியேறி
பறக்கும்/ சிறக்கும்.



நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் உதவக் காணீர்!
புழுவுக்கும் உதவக் காணீர்!
புகழ் வேந்தர் எம்ஜிஆர் புகழ்
"புதிய பூமி"யில் ஒளிரக் காணீர்!



யாதும் ஊரே யாவரும் கேளீர்!

"மதுவும் புகையும் மறத்தல்  நன்று!

சூது கவ்வாத வாழ்வே சான்று!



இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)


உலகில் பிறந்தோம், இறந்தோம் என்றிராது,
இறந்தும் இறவாப் புகழுடன்,

இறவாத இலையில்...
இரட்டை இலையில்,
இறைவனாய் வாழ்கிறார்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்!





"பற்றுக பற்றற்றார் பற்றினை"

பற்றுவோம் பரமனை வேண்டியே!!!


நூற்றாண்டு நாயகர் எம்ஜிஆர்
புகழினை போற்றுவோம்!


"இன்று போல் என்றும் வாழ்க"

மனிதப் புனிதரின் மங்காத புகழ்!

பல்லாண்டு வாழ்க!!! வளர்க!!!



புதுவை வேலு



















vendredi 26 août 2016

"சென்னைத் தமிழ்: வார்த்தைகளின் வரலாறு"


ஒரு மொழி தம்முடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்கிறது.

சென்னை,

பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் குழுமிய இடம்;
பல்வேறு நாட்டினர் கூடிய இடம். அதனால் சென்னைத் தமிழ் பல்வேறு மொழிகளை உள்வாங்கி, புதிய சொற்களை தனக்கே உரிய புரிதலோடு வெளியிட்டது.

மூன்று வித தமிழ்:

சென்னையில், மூன்று விதமான பேச்சுத்தமிழ் நடைமுறையில் உள்ளது.

ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மின்ட், இப்ராஹிம் சாகர் தெரு, துறைமுகம், சைனா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தான், தமிழ் பணியாட்கள் வாழ்ந்தனர். அது தான், தொடக்க கால மெட்ராசாக இருந்தது.

சாந்தோம், டுமீல் குப்பம், ஆல்காட் குப்பம், அயோத்தியா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வாழ்ந்தனர்.

வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, வடஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிழைப்புத் தேடி சென்னை வந்தவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி, புளியந்தோப்பு வரை, கூவம் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் குடியேறினர்.




வார்த்தைகளின் வரலாறு :

சென்னைத் தமிழாக அறியப்படும், பேமானி, சோமாரி, கஷ்மாலம், பொறம்போக்கு, கம்முன்னு கெட போன்ற வார்த்தைகளுக்கு பின், பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.

'பேமானி' என்பது,
பெர்ஷிய வார்த்தை
அதற்கு, நாணயமில்லாதவன், சொன்ன வாக்கை காக்காதவன் என்று பொருள்.

கஷ்மாலம் என்பது,
வடமொழி வார்த்தை.
அதற்கு, உடலில் உள்ள தேவையில்லாத பொருள் என்று பொருள்.

பொறம்போக்கு  என்பதற்குப் பின், ஒரு வரலாறு உள்ளது.
அது, ஆங்கில வார்த்தை.

அதாவது, 1800களில், இங்கிலாந்தில் இருந்து, பலர் தங்கள் நிலங்களை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டனர்.
லார்டு பென் புரோக் என்பவர், நிலங்களுக்கேற்ற வரி வசூலாகாததை விசாரித்து, ஆளில்லா நிலங்களை அரசு நிலமாக்க, 'பென் புரோக்' என்னும் சட்டத்தை இயற்றினார். அதேபோல, 1820களில், சென்னை மாகாண கவர்னராக இருந்த மன்றோ, ரயத்வாரி சட்டம் மூலம், மேய்ச்சல், காடு, கல்லாங்குத்து ஆகிய இடங்களை, பென் புரோக் சட்டத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கினார்.

அரசு இடங்களில் குடியேறியவர்களை,
'பென் புரோக்' என அழைத்தனர். பின், அது, புறம்போக்கு என்று ஆகி, தகுதி இல்லாத, கேட்பதற்கு ஆளில்லாதவர்களை திட்டும் வார்த்தையாக புறம்போக்கு ஆகிவிட்டது.

'கம்முன்னு கிட' என்பது,
'காம்' என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து, காமா இரு, கம்முனு கெட என மருவியது.

கிண்டி என்பது,
ஒரு ஆங்கில வார்த்தையிலிருந்து மருவியது.

வெள்ளச்சேரி, சென்ட் தாமஸ் மவுன்ட் உள்ளிட்டவை அடங்கியது தான், ஒயிட் டவுன் எனப்பட்டது.

அடையாற்றுக்கு மேற்கு பகுதியை, 'கன்ட்ரி சைடு' என, அழைத்தனர். அது, காலப்போக்கில், கன்ட்ரி, கன்டி, கிண்டி என மாறியது.


'சொன்னா மாரியா' :

மேற்கிந்திய தீவுகளில், ஸ்பானிஷ், பிரிட்டிஷ், ஏனாம், ஆப்ரிக்க மொழி கலப்பால், 'கிரியோ' என்ற மொழி உருவாயிற்று.

கிரியோ மொழி பேசுவோர், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பாண்டிச்சேரிக்கு வந்துவிட்டு, சென்னைக்கும் பீர் பாட்டில்களோடு வருவர். அவர்களில் பலர் இளைஞர்களாக இருந்தனர். அவர்கள், உல்லாச விரும்பிகளாக இருந்தனர். அவர்கள், இளம்பெண்களிடம், 'சொன்னா மாரியா' என்பர். அதாவது, தற்காலிக திருமணத்துக்கு தயாரா என்பர். அதற்கு உடன்படும் பெண்களுடன், அவர்களை, கடற்கரை வழியாக ஆற்காடு தெரு விடுதிகளுக்கு, ரிக் ஷாக்காரர்கள் சுற்றிக்கொண்டு அழைத்துச் சென்று,
அதிக பணம் பெற்றனர். இப்படி சம்பாதிப்பவர்களை, சொன்னா மாரியா என்று அழைத்து, பின், 'சோமாரியா' என மாற்றி, தற்போது, 'சோமாரி' எனக் கூறத் துவங்கி விட்டனர்.

வடசென்னை, சிந்தாதிரிப்பேட்டை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில், சகவாசம், சங்காத்தம், சினேகிதம் உள்ளிட்ட வடமொழி சொற்கள் அதிகமாக வழக்கில் இருக்கும்.

அழகான குஜராத்தி பெண்களை, குஜிலி என்பர். அழகான பெண்களை, ஜெகஜோதியாக, அம்சமாக என்றும் சொல்வர். அவை, வடமொழி சொற்கள். அதேபோல,
சாங்கியம், ஸ்வஸ்தம்
போன்றவையும் வழங்கப்படும்.

தாரை வார்த்தல் என்றதில் இருந்து, தொலைந்து போதலையும், தொலைத்து விடுவேன் என்பதையும், 'தாதாம் போச்சு, தாடாம் துாருவே' என்று சொல்லத்
துவங்கினர்





டோரர் - துரை :

அண்ணாதுரை, தம்பிதுரை போன்ற பெயர்களுக்குப்பின் உள்ள வரலாறு
இங்கிலாந்தில், நீண்ட நாட்களுக்குப் பின் பிறக்கும் குழந்தைகளை, 'டோரர்' என அழைத்தனர்.

இங்கிலாந்தில், இளைஞர்களின் குற்றங்கள் அதிகரித்ததால், அவர்கள், கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுப்பப்பட்டனர்.

பிரிட்டிஷாருக்குள் வழங்கப்பட்ட  "டோரர்"  என்ற வார்த்தை,  தோரர், தொரை என மாற்றப்பட்டு, வெள்ளைக்காரர்கள், அவர்களிடம் வேலை பார்த்தவர்கள், அந்தஸ்தில் இருந்தவர்களை எல்லாம்,
'இன்னா தொரை' என, அழைக்கத் துவங்கினர்.

தொரை, துரையாயிற்று. கப்பலில் இருந்து இறங்கிய வெள்ளையர்களிடம், பிச்சைக்காரர்கள் தொல்லை செய்வர். அவர்கள், 'டோன்ட் பாதர் மீ' என்பர். பாதர் என்பது பாஜர் என மருவி, 'பேஜார் பண்ணாதேப்பா' என, புழக்கத்தில் உள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளோரில் பலர், கட்டப்பஞ்சாயத்து செய்வர். அவர்களை சிந்தாதிரிப்பேட்டை ரவுடி என்றும், பின், பேட்டை ரவுடி என்றும் கூற துவங்கினர்.

'செக்யூர்' என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து, சாலைப்பணியாளர், வீடு கட்டுவோர் மூலம், 'சொகுரு' என்றாகியது.முகலாயர்கள் ஆட்சி புரிந்த சென்னையில், அரபி, உருது இல்லாமலா... 'தாபா' தபா என்றும், 'தக்கரார்' தகராறு என்றும், 'கேளாடி' கிள்ளாடி என்றும், 'பேவ கூப்' பேக்கு என்றும், 'கிர்கத்' கிராக்கி என்றும், பஜாரில் சண்டை போடுபவர் பஜாரி என்றும், உருது வார்த்தைகள், சென்னைத் தமிழில் விளையாடின. கூடவே, 'காலி' போன்ற அரபி வார்த்தைகளும் கலந்தன.

கோட்டையில் உள்ள வேலைக்காரர்களுக்கு, வேலைக்கு ஏற்ப பல வண்ண தொப்பிகள் வழங்கப்பட்டு, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அவர்கள் தங்களுக்குள் தொப்பிகளை மாற்றி ஏமாற்றி உதவியை பெறுவர். அப்படி ஏமாற்றுபவர்களை, 'கேப் மாறி' என்றனர்.

இவ்வாறு, சென்னைத் தமிழின் ஒவ்வொரு
வார்த்தைக்குப் பின்னும் உள்ள வரலாறு நம்மை  ஆச்சரியத்தில் ஆழ்த்தும் 


ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மருவிய தமிழ் சொற்கள் :

'தெனாவட்டு,
அல்லோலக்கல்லோலம்,
ஏடாகூடம்'
போன்ற தமிழ் வார்த்தைகள் உள்ள இதே சென்னையில், மருவிய சில தமிழ்ச் சொற்களும் அதன் பொருளும் ஆச்சரியப்பட வைக்கும்.

இதேக்கண்டி -இதேபோல்,

காண்டு - கோபம்,

அப்பேல்பட்ட - அப்படிப்பட்ட,

மீ - துப்பு,

துண்ணு - சாப்பிடு,

கூவு - கூப்பிடு,

மே - அன்பு, கோபத்தில் வரும் ஒட்டு சொல்,

வளிச்சி - அப்படி,

சண்டை வழிச்சி - வீண் வம்பு,
இஸ்; இச்சு - இழு, குடிகுடிச்சு - பிரசவம், நோக்காடு - பிரசவ வலி, கோராம் - பயம், பாப்பா வீட்டு அய்யர் - வேலைக்கு செல்லும் பிராமின், நாட்டுதல்,

புட்டுக்குதல் - இறத்தல்,
எம்மாம் - பெரிய,
தம்மா - சிறிய, அறியாப்பையன் - இறந்தபின் சொல்லும் வார்த்தை, அசால்ட் - அதிர்ச்சி, பீட்டர் விடுதல் - பாவ்லா செய்தல், ஆப்பக்காரன் - ஆங்கிலோ இந்தியன்.

தலை நகர மொழி (சென்னைத் தமிழ்)  வழி வந்த  கதையை விழி கொண்டு படித்தறிவோம் வாருங்கள்....


நன்றி:
 'யாழி' இதழ்  ஆசிரியர்: வகுலா வரதராஜன்
(தினமலர்/யூ டியூப்)






பகிர்வு:

புதுவை வேலு





jeudi 25 août 2016

"கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்"






ஆலிலையும் ஆனி பொன் தொட்டிலன்றோ
ஆயர்பாடி கண்ணன் கண் மலர
வேங்குழலும் வாயு தேவன் வாசலன்றோ

 தேங்குழலிசையில் கண்ணன் பண் ஓளிர

எண்ணம் எல்லாம் கண்ணன் தேன்நினைவு
நீலவண்ணன் சொல்லும் கீதை தேன்நிலவு

அச்சுமலர் பாதம் பதிப்பாய் அனந்தனே
அச்சுவெல்லமாய் இனிக்கட்டும் நல்வரவு


புதுவை  வேலு




mercredi 24 août 2016

"வா! கண்ணா வா!"



அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!

அமுது செய்ய அடியெடுத்து வருவாயோ?
அச்சுமலர் பாதம் பதித்து மகிழ்வாயோ?
அழகு மயில்பீலி சூடிய மணவாளா
அகிலம்
அகம்மகிழ வா! கார் வண்ணா!

கார்வண்ண மேனி மணிவண்ணா!
கவர்ந்திழுப்பாய்  கோபியரை கோவிந்தா
குருவாயூரில்  குடியிருப்பாய்  மாதவா
குறையொன்றும் இல்லாத கீதை நாயகா! 

நாயகா யதுகுல நந்த கோபாலா
நலம் தருவாய்  மாய மதுசூதனா
நாலாயிர திவ்விய பிரபந்தம்- ராசலீலா
நாராயண நம்பியின் புகழ்
பாடும்

பாடும் பாவைத் தமிழ் தந்த கோதை
சூடும் மலர் மாலை தரித்த பரந்தாமா!
காரிருள் நீக்கும் கதிரவனாய் கண்ணா
பேரருள் புரிய
வா! கலியுகக் கண்ணா!

புதுவை வேலு

samedi 20 février 2016

" தாய் மொழி தினம்".




இந்த இனிய நாளில் நா மகளின் நா வின் நாதத்தை இசைத்து, பெருந்தொண்டாற்றி வரும்
திரு சுப்பு தாத்தா வின் காந்தக் குரலில்,
புதுவை வேலு  இயற்றிய, பாடலை க் கேட்டு
செவிஇன்புற்று மகிழ்ந்தேன்! 


புதுவை வேலு  இயற்றிய,

"உலகத் தாய் மொழி" கவிதையை உலகறிய செய்தமைக்கு திரு சுப்பு தாத்தா அவர்களுக்கு மிக்க நன்றி! 

தமிழ் வாழ்க!




அன்னை அருளிய அன்பு மொழி
விண்ணைத் தாண்டிய ஆசை மொழி
மண்ணின் மாண்பை போற்றும் மொழி
உருவம் வெல்லும் உலகமொழி!


அருகும் மொழி போல் ஆகாது !
பருகும் மொழி போல் பயின்றிடுவோம்
உருகும் உணர்வின் உதய(ம்) மொழி
பெருமை பேசிட செய்திடுவோம்!


தாய் மண்ணே வணக்கம் என்போம்
தாய் மொழி இணக்கம் கொள்வோம்
தாய் மொழி பற்றுக் கொள்வோம்
தமிழ்மொழி கற்று வெல்வோம்!


புதுவை வேலு


"சுவாசமே! தமிழ் நேசமே!"






அன்னை அளித்த அமுத மொழி
கண்ணின்  இமையாய் காக்கும் விழி
மண்ணின் எல்லை மொழியின் வழி
மாண்புடன் சொல் வராது பழி

வாழ்வாங்கு வாழ்ந்திடவே வழி செய்வோம்
வீழாது விண்புகழ் எய்திடவே  செய்வோம்
தாழாது தழைத்து வளர்த்திடவே செய்வோம்
புகழேந்தி மொழி செழித்திட  தவம்செய்வோம்

உலகம் போற்றும் வளர்த் தமிழ்மொழியை
திலகமிட்டு வணங்கிவாழ்த்தினைப் பெறுவோம்
வாய்மொழி வாழி ! திருவாய்மொழி வாழி !
தாய்மொழி  வாழி ! தமிழ் மொழி வாழி !

புதுவை வேலு