dimanche 22 juin 2014

வெற்றி மாலை




மனம் ஒரு ஊஞ்சலடா-அதில்
அமராது ஒரு போதும் உன் ஏஞ்சலடா!
குணம் ஒரு கோவிலடா-அதில்
குடியிருக்க தெய்வம்தான் வேண்டுமடா


ஒருபோதும் கடல் வற்றி போகாது-இது
இயற்கையின்  நீதியடா!
இறைவனடி சேர்ந்த பின்புதான் ...
பாசங்கள்-ஈக்களாக-உன்மீது
மொய்க்குமடா




உன்னித்திடதில் உழைப்பிருந்தால்
பிழைப்புக்கு....
அழைப்புகள் தானாக...
ஓடி வரும்!!


தேன்மதுர தமிழ்மொழிபோல்.
வானுயர வலம்வந்து-வெற்றிமாலை
வாழ்வில்....
சூடி விடும்.




புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire