lundi 8 février 2016

"தாய்மை"



அமுதூட்டிப்  பார்  அழகு ஊற்றெடுக்கும்
அரவணைத்துப் பார் அன்பு  பெருக்கெடுக்கும்


பேரிளமை பெருக்கெடுத்து பெருகி வர
பேரானந்தம் பெருந்திரளாய் திரண்டு வர


பேர்கொழிக்க ஊட்டுகிறது கலை மான்
பேரிளமைத் தருவது தாய்மையென்று!


புள்ளி மான் புகட்டும் பாடம்
கல்வி மான் உணர்தல் வேண்டும்

அழகு என்பது அங்கத்தில் அல்ல
ஆனந்தத்தின் சங்கமத்தில் என்று!

புதுவை வேலு


12 commentaires:

  1. கவிதை அருமை நண்பா.... வாழ்த்துகள்

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    அற்புதமான வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. கவிதை மிக அருமை சகோ.

    RépondreSupprimer
  4. அருமை ஐயா கவிதை வரிகள்

    RépondreSupprimer
  5. அருமை
    தாய்மை போற்றுவோம்

    RépondreSupprimer
  6. //புள்ளி மான் புகட்டும் பாடம்
    கல்வி மான் உணர்தல் வேண்டும்
    அழகு என்பது அங்கத்தில் அல்ல
    ஆனந்தத்தின் சங்கமத்தில் என்று!//

    ரசித்த வரிகள்!
    த ம 3

    RépondreSupprimer