vendredi 1 août 2014

"சேவையே உன்னை சேவிக்கிறேன்"


"சேவையே உன்னை சேவிக்கிறேன்"






இன்பத் தமிழ் இனிதுவந் தளித்த எனது
வண்புதுவை பேராசிரியரே எ.மு.ராஜனே
பண்முகக் கலையின் பொக்கிஷம் - நீ!
விண்புகழ் தொட்டு விருதினைப் பெற்றாய் வாழி!


நாடு விட்டு நாடு பறந்துவந்த பறவையின்
கூடு சென்று புகழுரைத்தாய் புகழ்மணியே வாழி!
தேடிய தெய்வத் தமிழ் ஈந்திடும் இறவாப் புகழ்
சூடிய உன்னை போற்றுகிறோம் சாதனையாளரே வாழி!



பூபாளம் இசைத்தபடி நேபாளம் அழைத்ததடி!
உலகம் உனக்கு விருதுபொட்டு வைத்ததடி
மரம் இல்லாத காடுகளில் உன் தொண்டு
வானுயர்ந்த சோலைக்கு சேலைதனை கட்டுதடி!


நாதனை நினைத்தபடி நாயகனை போற்றுகிறோம்
"தினமும் முப்பது மணி நேரம்" செலவோடு

சேவையே உன்னை சேவிக்கிறோம்-விருதுக்கு

விருந்து படைத்து திரும்பி வருக! வாழ்க!


புதுவை வேலு




Aucun commentaire:

Enregistrer un commentaire