jeudi 6 octobre 2016

"நம்பிக்கை நாதம்"



துயர் துடைக்கத் துணை எதற்கு?
தும்பிக்கைத்  துணை இருக்க எனக்கு!
பிளிறும் சக்தி எனக்குள்  இருந்து
களிறு என்ற பெயர் பெற்றேன்.

ஆண்மகன் அழுவது தகுமோ பிடியே!
அழுகை அல்ல இது! ஆனந்தக் கண்ணீர்
தொழுகை செய்தேன் இறைவனை வேண்டி
பழுதின்றி காவிரியை  பகிர்ந்து தருக!


நம்பிக்கை நாதம் நலம்  பெறவே
தும்பிக்கை இறைவா துணைசெய்!
 

புதுவை வேலு

5 commentaires:

  1. நல்லதொரு கோரிக்கை கவி நண்பா.

    RépondreSupprimer
  2. நன்றி நன்னெஞ்சே!

    RépondreSupprimer
  3. கவிதை மூலம் நல்லதோர் கோரிக்கை..... பாராட்டுகள்.

    RépondreSupprimer
  4. நன்றி நன்னெஞ்சே!

    RépondreSupprimer
  5. துயர் துடைக்கத் துணை எதற்கு?
    நம்பிக்கை துணை இருக்க எனக்கு!
    கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer