vendredi 9 octobre 2015

"எழுகவே! எம்! தமிழே!"

படம் சொல்லும் பாடம் 

 

எழும் செங்கதிராய்!
எழுந்து நின்று!
எழுத்தினை வடித்தார்
எம் தமிழ் மக்கள்


விழுந்து விடாது
தொடுவோம்!
ஒற்றுமையால்
தொடு வானத்தை!


வேற்றுமை 

வேரறுந்து வேகட்டும்!
தீமைகள்
'தீ'யிக்கு இரையாகட்டும்


வாழ்க தமிழ்!

மலர்க !
வாசமுடன்
வலைப் பூக்கள்! வெல்க!

புதுவை வேலு

20 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    ஒருதமிழன் இருக்கும் வரை எம்மொழி வாழும் ஐயா.
    கவிதை நன்று இரசித்தேன்.த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. நன்மை பயக்கும்
    நம் மொழி அருமை
    நலம் பெறும்!
    நாளும் பலம் தரும்!

    முத்தமிழுக்கு
    முதல் கருத்து
    முத்தமிட்டு தந்தாய்
    கவி நீ வாழ்க!

    நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. அரசியலுக்கு அப்பாற்பட்டவை.
    நாம் வீழ்தாலும் எழுவோம் உண்மை புதுவை வேலு அவர்களே.
    "ஒற்றுமையால் தொடு வானத்தை" - இதுவும் ஒரு வாசமிகு நந்தவனம்.

    sattia vingadassamy

    RépondreSupprimer

  4. தொடு வானம் தொலைவில் இல்லை என்பதை!
    ஒற்றுமைக் குரல் ஓங்கி கருத்தாய்,ஒலித்தமைக்கு,
    நன்றி நண்பர் சத்யா அவர்களே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. Réponses
    1. வாருங்கள் நண்பர் நாகேந்திர பாரதி அவர்களே!
      அருமை பாராட்டிய தங்களது கருத்து தமிழுக்கே சேரும்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான வரிகள் என்றும் தமிழ் மொழி வாழும் ஐயா.

    RépondreSupprimer
    Réponses
    1. வாய்மையை போற்றும் தாய்மொழி "தமிழ்"
      பொய்யிருள் போக்கி பொலிவுடன் வாழும்!
      வருகைக்கு நன்றி நண்பரே!
      தொடருங்கள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமை நண்பரே நல்ல பா வரிகள் நண்பா... வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தும் பண்பை தந்ததும் தமிழ் மொழி,
      சிறந்தே வாழும்! சிறப்புடன் வாழும்
      வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. நற்றமிழை நயமிகு சொல்லெடுத்து அருமை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. ஒற்றுமையால் வானம் தொடுவோம். அழகான கவிதையால் மனதைத் தொட்டுவிட்டீர்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் முனைவர் அய்யா!
      மனதை தொடும் வருகை சிறப்பு!
      வாழ்த்துக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. /ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு நம்மில்ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு’ என்ற தேசியக்கவி பாரதியின் கருத்தை அழகுத்தமிழ் கவிதையாய் வடித்தமைக்கு பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
  11. வணக்கம் அய்யா!
    பாரதியின் கருத்தை அழகுத்தமிழ் கவிதையாய் வடித்தமைக்கு குழலின்னிசை பெருந்தவம் செய்திருக்க வேண்டும் அய்யா!
    பாராட்டு மெய்ப்பட மேலும் உழைத்திடல் வேண்டும்!
    உழைப்போம்! உன்னத கருத்தை உலகுக்கு சொல்லி உயர்வடைய முயல்வோம்!
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. வாழ்க தமிழ்!
    மலர்க !
    வாசமுடன்
    வலைப் பூக்கள்! வெல்க!

    RépondreSupprimer
    Réponses
    1. வலைப் பூக்கள்! வெல்க!
      நேசமிகு தோழரே, நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. Réponses
    1. இணையம் இன்றி இவ்வுலகம் இயங்காது.
      வலைப்பதிவர் திருநாளில் கரந்தையைச் சேர்ந்தவர் பேச்சு அருமை நண்பரே!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer