lundi 14 juillet 2014

முதலாம் நினைவாஞ்சலி (வாலிபக் கவிஞர் வாலி)




அவதாரப் புருஷரே! ஆன்மீக அரசரே!- நின்புகழை
அரிநாமம் கொண்ட நான் போற்றுகின்றேன்!
மண்ணில் மறைந்தாலும் விண்ணில் பறந்தாலும்
கண்ணில் மறையாது கன்னித் தமிழ்போல் வாழியவே



நறுந் தமிழின்று நம்மைவிட்டு -வாலி
அருந்தமிழ் அகலின் சுடரொளிப் பட்டு
பருந்தாய் பறந்தே பரந்தாமனைத் தொட்டு
பேருலகம் சென்றாய் கவிப் பெருந்தகையே வாழ்க!



பூமியில் மாண்டாலும் வாலியே! - நின்புகழ்
பாண்டவர் பூமியிலும் ஓங்கி ஒலிக்குதப்பா!
வராளி வைகுண்டம் வான்வழியிலும் தெரியுதப்பா!
மாதவம் செய்கின்றோம் மாதவனே!- வாலியே நீ!
மண்ணில் மீண்டும் "கிருஷ்ண விஜயம்" செய்வாயா?

புதுவை வேலு
 







Aucun commentaire:

Enregistrer un commentaire