vendredi 25 décembre 2015

"ஆருத்ரா தரிசனம்"


ஆருத்ரா தரிசனம்

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் சிவபெருமான், பஞ்ச பூதங்களில் எல்லையே காண முடியாத ஆகாயத்தைத் தனதாக்கிக்கொண்டு அருளும் திருத்தலம் சிதம்பரம்.
இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில், மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நிகழும் ஆருத்ரா தரிசனம், மிக அற்புதமான வைபவம்.
ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும்.
இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் திருநடனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநடராஜ பெருமான்.
உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.
இந்த நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரைத் தரிசித்து வழிபட்டு வர,
நம் இன்னல்கள் யாவும் அகன்று, வாழ்க்கை இனிமையாகும் . 
 ‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று பொருள்படும்.


பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும், திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண்பதற்காக தவம் இருந்தனர்.
அவர்களின் பக்திக்கு பணிந்த  ‘ஈசன், தில்லையில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் தனது திருநடனத்தை காட்டி,  கருணையால் இரு பக்தர்களையும் நனைத்த நிகழ்ச்சியே "ஆருத்ரா தரிசனம்".
அவனின்றி அணுவும் அசையாது

சிவனின்றி எதுவும் இசையாது
என்று சொல்லி வைத்தார்கள்.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்கள், ஈசன் தனியாக ஆடியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் சிறப்பு வாய்ந்தது, திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஆகும்.
தில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில்,
மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.


ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த திருமால்,
 திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார்.
அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது, பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது.
தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்தார், ஆதிசேஷன்.
ஆனந்தத்தின் காரணம் என்ன என்று ஹரியிடமே கேட்டார்.
மகாவிஷ்ணு கூறினார் :
சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்என்றார்.
இதைக் கேட்டதும்,  திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார் ஆதிசேஷன். பார்த்தசாரதியும் ஆசி கூறி அனுப்பினார்.
ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார்.
பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி,  ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.
கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது, உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார். அப்போது, ‘பதஞ்சலிஎன்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார்.
அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு, ஆனந்தத்தில் தாழ் பணிந்தார். தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார்.
அண்டசராசரத்தையும் அடக்கி ஆளும் ஈசன் அறியாததும் உள்ளதா என்ன?
சிவனே பேசத் தொடங்கினார் :
பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி,  வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து காத்திருக்கிறார்.
எனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!என்று கூறி மறைந்தார்.
பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லையம்பதிக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று தனது திருநடனத்தை அவர்கள் இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.
இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது.




இன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும் என்று நம்பப்படுகிறது.
உலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின் இயக்கமே!.
நிலம்,
நீர்,
காற்று,
 நெருப்பு,
ஆகாயம்
ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக, உலகை இயங்கச் செய்து,
ஈசன் திருநடனம் புரிகின்றார்.
இறைவனின் அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை.

சிதம்பர ரகசியம்:
மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன.
கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது;
இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது.
இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன.
இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும்.

திருமூலர், திருமந்திரத்தில்,
'மானுடராக்கை வடிவு சிவலிங்கம்,
மானுடராக்கை வடிவு சிதம்பரம்,
மானுடராக்கை வடிவு சதாசிவம்,
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே'
என்று கூறுகிறார்.
அதாவது, 'மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்' என்ற பொருளைக் குறிக்கிறது
பகிர்வு: 
புதுவை வேலு




13 commentaires:

  1. சிதம்பர ரகசியம் பற்றி தெரிந்து கொண்டேன்.
    த ம 1

    RépondreSupprimer
    Réponses
    1. சிதம்பர ரகசியம் பற்றி தெரிந்து,
      வாக்களித்தமைக்கு நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நிறய பேச இருக்கிறது சிதம்பர ரகசியம் குறித்து.
    நல்ல பதிவு

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வாக்களித்தமைக்கு நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  4. சிதம்பர இரகசியத்தை முன்பே அறிந்திருந்தாலும் திரும்பவும் தங்களது விரிவான விளக்கத்தில் படித்து மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. திருவாதிரை சிறப்பினை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    அறியாத தகவலை பகிர்ந்துகொண்டீர்கள் படித்த போது மகிழ்வு த.ம5
    எனது பக்கம் வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  6. கருத்துரைக்கும், அழைப்பிற்கும் நன்றி கவிஞரே!
    தங்களது தளம் வந்து கருத்தினை தந்துள்ளேன்.
    நன்றி!
    தொடர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. சிதம்பர ரகசியத்தில் முதல் பத்தி மட்டும் தெரியும். மற்ற விஷயங்கள் புதியவை.

    RépondreSupprimer
    Réponses

    1. "ஆருத்ரா தரிசனம்" பற்றிய மேலும் பல தகவல்களை அறியப் பெற்றமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிதம்பர ரகசியம் பற்றி தெரியும் என்றாலும் இங்கு மீண்டும் நினைவுபடுத்தியவை..பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    RépondreSupprimer