lundi 21 juillet 2014

டி.வி.ஆர் நினைவு அஞ்சலி







டி.வி.ஆர் நினைவு அஞ்சலி
(21/07/2014 தினமலர் நாளிதழில் வெளியாகி உள்ளது)







அன்னைத் தமிழின் அருட்பெருஞ்சுடரே!
விண்ணைத் தொட்டு விடிவெள்ளியானாய்
மண்ணைத் தொட்டு வணங்கியே நானும்
உன்னை புகழ்ந்தேன் டி.வி.ஆர் புகழ் வாழ்க!


கருத்து இதழியலின் விருத்தம் - நீ!
பொழுதுபோக்கு இதழியலின் இன்பம் - நீ!
செய்தி இதழியலின் செந்தமிழ் - நீ
சிறப்பு வகை இதழியலின் உயர்பிறப்பு - நீ!


நானிலம் போற்றும் நால்வகை சிறப்பும்!
நான்காவது தூணில் நற்றமிழால் பதித்தேன்
தெய்வத்  திரு. டி.வி.ஆர்  புகழ்
தென்றலாய் தவழ்ந்து தேன் தமிழாய் வாழ்க!


புதுவை வேலு

2 commentaires:

  1. பத்திரிகை துறையில் தினமலர் சேவையையும், தமிழ் பெருமையையும் குறிப்பிடும் புதுவை வேலு அவர்கள், தான் குருவுக்கு அளித்த இந்த கவிதை காணிக்கையாக கருதுகிறேன்.

    sattia

    RépondreSupprimer
  2. சுதந்திர தேசத்தின் கருத்துரிமையை தாங்கி நிற்கும் தூணான பத்திரிக்கை துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான திரு. டி.வி.ஆர் அவர்களின் அரும்பணியை போற்றும் அருமையான கவிதை.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer