vendredi 13 novembre 2015

"அக்கறை பெருக! சர்க்கரை குறையும்!"

சர்வதேச நீரிழிவு நோய் தினம்



 நவம்பர் 14 ந்தேதி,
ரோஜாவின் ராஜா 'நேரு'ஜியின் பிறந்த தினம் என்பதையும், அதுவே 
நமது நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடப் பட்டு வருவதையும்
நாம் அறிவோம்.

அதேவேளையில்,  
சர்வதேச ரீதியில் இந்த நாளை 'ஐக்கிய நாடுகள் சபை'யானது
"சர்வதேச சர்க்கரை நோய் தினம்" என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக அறிவுறுத்தி உள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையினால்,  2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம்  "சர்வதேச சர்க்கரை நோய் தினம்" அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய் இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியாவானது முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்தியாவில், 70 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி, நமது அடி வயிற்றில் புளிக்கு பதிலாக சர்க்கரையாக கரைகிறது.

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை, சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இந்நாள் நினைவுகூறப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும், உலக சுகாதார நிறுவனத்தினாலும், 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.

நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள்.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால் நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.

நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்குமுதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது? அது! மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.

முதலில் நீரிழிவு என்றால் என்ன? என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். 

  இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள்  குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது.  உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு, உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.
குருதியில்(Blood) குளுக்கோசின் அளவு கூடும் போது, சிறுநீரகங்கள் அதிக அளவிலான குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சர்க்கரை (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது! இதனாலேயே இதை "நீரிழிவு" என்கிறோம்.
 


நீரிழிவு நோயின் சில ஆரம்ப அறிகுறிகள்:
1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. எளிதில் கோபமடைதல்
9. கண் பார்வை குறைவடைதல்.
10. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு கூடிய நாட்கள் எடுத்தல்.

சிறுநீர் பரிசோதனை, இரத்தபரிசோதனை செய்வதன் மூலம் இந்நோயை
கண்டறிவது அவசியமாகும்.

சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும், அதனால் பாதிக்கப் படுபவர்களின் வாழ்க்கை என்னவோ ? கசப்பாகத்தான் இருக்கிறது.

உணவில் அவசியம் புஞ்சைத் தானியங்களையும் கீரை வகைகளையும் துவர்ப்புகசப்பு உள்ள காய்கறிகளையும்  சேர்த்துக் கொள்வதோடு, உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, எளிய உடற்பயிற்சியுடன் இயற்கை தரும் சத்தான உணவுகளை உண்பதுடன், திட்டமிட்டு வாழ்க்கையை வாழ்ந்தால்  நோய்களை நாமும் வெல்லலாம்.

"நோயற்ற வாழ்வே... குறைவற்ற செல்வம்'   

 பகிர்வு  

புதுவை வேலு

 
நன்றி:(oneindia)




31 commentaires:

  1. அக்கறை பெருகட்டும்
    சர்க்கரை குறையட்டும்
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் கரந்தையாரே,
      பதிவின் தலைப்பு வாசகத்தையே
      கருத்தாய் தந்து சிறப்பித்தமைக்கு
      சிறப்பான நன்றி.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சர்க்கரைத் தகவல்களுக்கு நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய கருத்துக்கு நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. //சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோஇனிப்பாக இருந்தாலும், அதனால் பாதிக்கப் படுபவர்களின் வாழ்க்கை என்னவோ ? கசப்பாகத்தான் இருக்கிறது.//

    உண்மைதான்.

    நீரிழிவு நோய் பற்றி விரிவான தகவலைத் தந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல கருத்துடன் வருகை தந்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. விளக்கங்கள் அருமை ஐயா...

    நோய் அல்ல... இது ஒரு குறைபாடு...

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் வார்த்தைச் சித்தரே,
      நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால்,

      நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார்.

      இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.
      கருத்தை சொல்லி பதிவை சொல்லி சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    யாவரும்அறிய வேண்டிய விடயம் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி கவிஞரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தீவிர ஆராய்ச்சி செய்யப் பட்டு ,ஜீனிலேயே இன்சுலின் குறைபாடு வராமல் தடுத்தால் நல்லது !

    RépondreSupprimer
    Réponses
    1. தீவிர ஆராய்ச்சி செய்யப் பட்டு ,ஜீனிலேயே இன்சுலின் குறைபாடு வராமல் தடுத்தால் நல்லது !
      நல்ல யுத்தி வரவேற்போம்.
      நன்றி நண்பர் பகவான் ஜி அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பயனுள்ள தகவல்கள் தந்த நண்பரே நன்று நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. தொடர் பதிவின் நிர்வாகியே வருக
      பின்னூட்டம் மற்றும் வாக்குக்கு நன்றி நண்பா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. இக்காலகட்டத்தில் வயது பாரபட்சமின்றி அனைவரும் எதிர்கொள்ளும் நோய்களில் இதுவும் ஒன்று. அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்த விதம் நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யா அவர்களின் வருகைக்கும், கருத்திற்கும் கனிவான நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும், அதனால் பாதிக்கப் படுபவர்களின் வாழ்க்கை என்னவோ ?
    மருந்தும் கசப்பே என்பது உண்மை.
    இது அதைவிட கொடுமை, நன்றி புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses


    1. "இது அதைவிட கொடுமை"
      எனது நிலையை மனதில் வைத்து அல்லவா சொல்லியுள்ளீர்கள்?
      நன்றி நண்பர் சத்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பயனுள்ள கட்டுரை. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. பயனுள்ள மருத்துவக் கட்டுரை என்று
      மனதார பாராட்டிய சகோதரி அவர்களுக்கு
      குழலின்னிசையின் நன்றி,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. காலத்துக்கேற்ற தகவல்கள் நண்பரே...........

    RépondreSupprimer
    Réponses
    1. "காலத்துக்கேற்ற தகவல்கள் நண்பரே".
      காலமெல்லாம் நிற்கும் கருத்து
      நன்றி தோழரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. சிறப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. சிறப்பான தகவல்களை மேலும் தருவதற்கு
      "குழலின்னிசை"க்கு ஊக்கத்தை பாராட்டாக,
      வழங்கிய நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. தமிழில் விளக்கமான ஆரோக்கிய பதிவு நன்றி.
    //சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும்.//
    தற்போது புற்று நோயே Pancreasல் எனக்கு தெரிந்த இந்தியர் சிலருக்கு வந்துள்ளது. Pancreasன் தமிழ் பெயர் சதையியா ஐயா.

    RépondreSupprimer
    Réponses
    1. "தற்போது புற்று நோயே Pancréas ல் எனக்கு தெரிந்த இந்தியர் சிலருக்கு வந்துள்ளது"
      தங்களது கருத்து முற்றிலும் உண்மை!
      ஆஸ்திரிலியாவில் வாழ்ந்து மறைந்தார் எனது இளைய தம்பி Pancreas புற்று நோயினால்,
      தாளாத மனவருத்தம் தந்த நிகழ்வு! மீண்டும் நினைவுக்கு கொண்டு சென்று சேர்த்தது தங்களது கருத்து.
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. சிறந்த உளநல வழிகாட்டல்
    சிந்திக்கச் சிறந்த பதிவு

    RépondreSupprimer
    Réponses
    1. உளநல வழிகாட்டல் செய்வதற்கு ஊக்கப் படுத்திய அய்யாவுக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. சர்க்கரை நோய் பற்றிய தகவல்களைச் சொல்லிய நல்ல பதிவு. பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல பதிவு என்று பாராட்டி "குழலின்னிசை"க்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. நீரழிவு நமக்கு பேரழிவு இதனால் வாழ்வு என்றுமே சீரழிவு என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer