mercredi 1 octobre 2014

கர்மவீரர் காமராஜர் (நினைவாஞ்சலி )





கர்மவீரர் காமராஜர்

 

 



ஏழைகளின் கல்விக்கு கண் தந்த
கருப்புக் கண்ணன்!
வாழை போல் தம்வாழ்வை மக்களுக்கு
ஈந்த மன்னன்

கூழைக் குடித்து குடிசையில் வாழ்ந்த
ஏழைத் தலைவன்
தாகம் தீர்க்க தண்ணீர் திட்டம் வகுத்த
தங்கத் தமிழன்

இருண்ட தமிழகம்
வறண்ட தமிழகம்
இவரது ஆட்சியில் இல்லை
இருந்தும் மக்கள் தோல்வியை தந்தது
கொடுமையின் எல்லை!


காமாஷி(விளக்கு) இல்லாத
இல்லங்கள் இல்லை!
காமராஜர் இல்லாமல்
கல்வி ராஜ்யம் இல்லை.


தூய்மையும் வாய்மையும்
வகுத்து வாழ்ந்த
தூயவரை வாழ்த்துவோம் வாரீர் வாரீர்!


புதுவை வேலு







Aucun commentaire:

Enregistrer un commentaire