jeudi 21 mai 2015

"நெஞ்சுக்குள் தமிழ்"

 அன்பு பறவைகள்






தொண்டைக்குள்
தொக்கி நிற்கும்

தொல்காப்பியத்தை
தோண்டி எடுத்து!



அன்பின் வெளியீடு
அகநானூறு பாடல்களை


அதன்!
அருங்குரலில் - நாம்
கேட்பதற்கு

அவசர உதவி செய்கிறதோ?
இந்த...
அன்பு பறவை!


புதுவை வேலு

பட உதவி: தினமலர்



24 commentaires:

  1. இவ்வளவு வேகம் தாங்காதுப்பா, ஒரு நாளைக்குள் இரண்டு பதிவு. அருமை தங்களின் கற்பனை. அதுவும் இலக்கியத்தோடு, இலக்கணத்தோடு. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அந்த பறவை படத்தை பார்த்ததுமே சட்டென்று மனதில் தோன்றிய வரிகளை
      காக்க வைக்க மனம் இல்லை சகோ!
      அதனால் உருவான திடீர்க் கவிதை!-இது!
      தங்கள் வலைப் பக்கம் என்னால் வர முடியாமல் போன போதும்,
      குழலின்னிசைக்கு பெருமை சேர்க்க வந்து கருத்திட்ட தங்களுக்கு, மிக்க நன்றி! சகோ!
      தங்களது படைப்பின்மீது மிகுந்த மதிப்பு எப்போதும் எனக்கு உண்டு சகோ!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆகா நான் 108க்கு போண் செய்கிறேன் நண்பா...
    தமிழ் மணம் 1

    RépondreSupprimer
    Réponses

    1. அவசர உதவிக்கு சவுதி அரேபியாவிலும் தொலை பேசி எண் 108 தானா?
      நண்பரே?
      அதுசரி இந்தியாவுக்கு வந்து போன் செய்யக் கூடாதா? என்று நீங்கள் பேசும் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது கில்லர்ஜி அவர்களே 80 உங்களுக்கு தெரியுமா?
      வருகைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா.

    நல்ல கற்பனை வரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. கவிஞர் ரூபன் அவர்களின் எழுத்துப் படைப்புக்கள் யாவும்
      சிறப்படைய வாழ்த்துகிறேன்!
      "நெஞ்சுக்குள் தமிழ்" கவிதையின் கற்பனைத் திறனை ரசித்து
      பாராட்டிக் கருத்தினை வடித்தமைக்கு,
      "குழலின்னிசை"
      தங்களுக்கு,
      நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அன்புப்பறவையின் அவசர உதவி .... ரஸிக்க வைக்கும் கற்பனை ! :)

    RépondreSupprimer
    Réponses
    1. பறவை பற்றிய கவிதையை பார்த்ததும்
      கருத்திட்டால்?
      பறவைக் காய்ச்சல் வந்து விடுமோ என்று
      பயங்கொள்ளும் பதிவாளர்களாக இல்லாமல்
      பாய்ந்தோடி வந்து கருத்தினை வடித்த
      அய்யாவை வணங்குகிறேன்!
      ஊக்கப் படுத்தி உயர்வடையச் செய்யும் உள்ளம்
      இங்கு வேண்டும் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கற்பனை சூப்பர்....அழகாய் படைக்கிறீர்கள் சகோ வாழ்த்துக்கள் தொடர்கிறேன்...தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய சகோதரிக்கு
      அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அதீத கற்பனை. ஆனால் மிகவும் பொருத்தமான கற்பனை. பிரமிப்பை ஏற்படுத்தும் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய முனைவர் அய்யாவுக்கு
      அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
    த ம+1

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய முனைவர் நண்பருக்கு
      அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. அருமை பாராட்டிய முனைவர் நண்பருக்கு
      அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. கற்பனை அருமையே!

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டிய அய்யாவுக்கு
      அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ...பசிக்கு தின்ற உணவை..தோண்டி எடுப்பதாக தோன்றுகிறது நண்பரே

    RépondreSupprimer
  11. தோழரே!
    வருகைக்கு முதற்கண் நன்றி!
    தாங்கள் கூறியது படத்தின் உண்மைக் கருத்தாகவும் இருக்கலாம்!
    ஆனால்?
    அந்த படத்தை பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்வே இத்தகைய தமிழ் மணம் வீசும் கற்பனைக் கவிதை !
    ஆபத்தில்லாத அதீத கற்பனை! பொறுத்தருள்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. அகநானூறு பாடல்களில் தாய் மற்றும் பிள்ளை பாசம் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. உணவை தோண்டி மற்றும் தேடி உண்பது கொடுமை.
    தாய் குருவியில் (அந்த உணவைதேட தாய் குருவி பட்ட கஷ்டம் அதற்கு மட்டுமே தெரியும்) அவசர உதவி அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  13. நண்பர் சத்தியா அவர்களே!
    தோழர் வலிப் போக்கன் அவர்களுக்கு தந்த பதிலையே தங்களுக்கும் தருகிறேன்!
    நன்றி!

    தாங்கள் கூறியது படத்தின் உண்மைக் கருத்தாகவும் இருக்கலாம்!
    ஆனால்?
    அந்த படத்தை பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்வே இத்தகைய தமிழ் மணம் வீசும் கற்பனைக் கவிதை !
    ஆபத்தில்லாத அதீத கற்பனை! பொறுத்தருள்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. கவிஞனின் கற்பனைக்கு எல்லை எது? தங்களின் கற்பனையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கற்பனைக் காட்சியினை ரசித்த அய்யாவுக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer