samedi 30 mai 2015

"சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்" (மே 31)





                                                                          பட உதவி: தி இந்து



இதழ்கள் இடையில் வைத்து - புகை
இழுத்தே தான்! இன்பம் காண்கின்றார்!
பாழும் நோயில் பரிதவித்து - முடிவில்
நோயால் மடிந்தேதான்! போகின்றார்!

வருவாய் தருவாய் என்றாலும் - புகை
உருவாய் உலவும் உனைத் தொட்டால்!
எரிந்தே போவார் !  அம் மக்கள் !
அறிந்தே அழிப்போம் அதையின்று!

உயிருக்கு உலை வைக்கும் " புகையிலை "
உலகில் பயிரிட தடை சொல்வோம்!
உய்யும் மக்கள் நோயுறாது - காக்கும்
உயர் செயலை நாம் செய்வோம்!

புதுவை வேலு

 

 

                            நீ! என்னை எரித்தால்? 

                            நான் உன்னை எரிப்பேன்!

                                 

28 commentaires:

  1. அருமை...

    புகையும் பகையும் ஒன்றே... தவிர்ப்போம்...

    RépondreSupprimer
    Réponses

    1. புகையும் பகையும் ஒன்றே... தவிர்ப்போம்.

      உண்மை நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிறப்பான பகிர்வு. புகை நமக்கு பகை.....

    RépondreSupprimer
    Réponses
    1. புகை நமக்கு பகை...
      உண்மை நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம். பயன்படுத்துபவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அருகில் இருப்பவரும் தான். காலத்திற்கேற்ற பதிவு. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. காலத்திற்கேற்ற பதிவு.
      நன்றி! சகோ!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இதுவும் ஒரு வித சடங்கே! நண்பரே!

    RépondreSupprimer
    Réponses

    1. சடங்கு என்று அதை கிடங்கில் போடாமல்
      அறிவுறுத்தலை நாம் செய்தால்
      பலன் இன்று இல்லாவிடினும்
      நாளை கிடைக்கலாம் அல்லவா புலவர் அய்யா அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. தகவலுக்கு நன்றி! நண்பரே.....

    RépondreSupprimer
    Réponses

    1. தோழமைமிக்க வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. புற்றுநோய்க்கு ஆணிவேர்
    புகையிலை உற்பத்திகளே!

    RépondreSupprimer
    Réponses
    1. புற்றுநோய்க்கு ஆணிவேர்
      புகையிலை உற்பத்திகளே!
      மாற்றுக் கருத்துக்கே இடமில்லாத
      உண்மை வரிகளை கருத்தாக பதிந்தமைக்கு
      பாவாணர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமையான விளிப்புணர்வு பதிவு நண்பரே....

    RépondreSupprimer
    Réponses
    1. நாளும் நல்லதொரு விழிப்புணர்வை
      எழுதி வரும் நண்பரின் நற்கருத்து
      நலம்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. மற்ற பழக்கங்கள் கூட பயன்படுத்துபவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப் பழக்கம் மட்டும் அருகில் இருக்கும் குழந்தைகள் முதற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்துவது. அதனால் தான் புகையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பெரும் போராட்டம் நடக்கிறது.
    த ம 6

    RépondreSupprimer
    Réponses
    1. புகையை ஒழிப்போம்!
      பகையின்றி வாழ்வோம்!
      வருகை சிறப்பு!
      வாக்கு வளம்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  9. புகையினால் கேடு புகைபிடிப்பவருக்கு மட்டுமல்ல அருகில் இருப்பவருக்கும் வரும். எனவே புகையிலை பயிரிடுவதை தடை செய்வதே நல்லது.

    RépondreSupprimer
    Réponses
    1. உயிருக்கு உலை வைக்கும் " புகையிலை "
      உலகில் பயிரிட தடை சொல்வோம்!

      கவிதை வரிகளையே கருத்தாக சொன்னமைக்கு
      அன்பின் விதையான நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. புகை எதுவுமே பகைதான் ,அது மனுஷன் வாயில் இருந்து வந்தாலும் சரி ,பஸ்,லாரியில் இருந்து வந்தாலும் சரி :)

    RépondreSupprimer
    Réponses
    1. மிகையில்லாத அருமை வகையான கருத்து
      உவகைமிக்க வரிகள் உண்மை! பகவான் ஜி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. இதழ்கள் எழுதும் மரணசாசனம் ..
    கவிதை ஜோர்..
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. இதழ்கள் எழுதும் மரணசாசனம்
      கவிதை தோழரே!
      அருமை!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. 25 வருடங்களாக நான் புகைத்த புகை இல்லை, 10 வருடங்களாக நான் மறந்த புகைதான் வாழ்வின் பொக்கிஷம், புகையை ஒழிப்போம் புனிதம் பெறுவோம் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அனுபவக் கருத்து ஆரோக்கியமானது!
      உள்ளத்தின் உண்மைகளை அள்ளித் தந்து உலகை நல்வழி படுத்த முயன்றமைக்கு
      மிக்க நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. இக்கொடிய பழக்கத்தால் தம்மைத் தொலைத்துக்கொண்டிருக்கும் பலரை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அவர்கள் திருந்த ஒரு நல்வாய்ப்பு கிடைக்கட்டும்.
    நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
    http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யாவின் வருகைக்கு மிக்க நன்றி!
      இனிய கருத்தை தேனாய் தந்தீர் அய்யா!

      இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த தங்களது நேர்காணலை வாசிக்க வருகிறேன் அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. பன்னீர் புகையிலை, பான் பராக்
    வாயிலிட்டுச் சுவைக்கலாம்
    சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
    புகை விட்டு ரசிக்கலாம்
    எத்தனை வழிகள்
    எமனை விரைந்தழைக்க!

    RépondreSupprimer
    Réponses
    1. எமனை விரைந்தழைக்கும் ஏகாந்த வழிகளை
      அடைப்பதற்கு வழி சொன்னமைக்கு நன்றி
      சென்னை பித்தன் அவர்களே!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer