jeudi 15 janvier 2015

மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்


தரணி போற்றும்  தமிழர் திருநாளில்

திருவள்ளுவர் தினம்

மாட்டுப் பொங்கல் - தினத்தில்

வலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும்
குழலின்னிசை வாழ்த்து இசை இசைக்கின்றது.


அனைத்து அன்புள்ளங்களுக்கும்

திருவள்ளுவர் தினம்

மற்றும்

மாட்டுப் பொங்கல்  நல்வாழ்த்துக்கள்


நன்றியுடன்/நட்புடன்,

புதுவை வேலு




திருவள்ளுவர் தினம்







வாய்மையை போதித்த நம் தெய்வப் புலவன்  வள்ளுவனுக்கு
மத்திய அரசு சிறப்பு செய்து இருப்பது  அதாவது,
'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்'
என, மத்திய அரசு அறிவித்திருப்பது.
வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இதை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழ் வலைதள படைப்பாளர்கள் /பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோமாக! மேலும்  « திருவள்ளுவர் தினத்தை » சிறப்பு செய்யும் வகையில்
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டுவோமாக !




குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.



 மாட்டுப் பொங்கல்










அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கால்நடையான

பசு/காளைகளுக்கு ,

பெருமை சேர்ப்போம்.

"மாட்டுப் பொங்கலை" மகிழ்வுடன்  கொண்டாடுவோம்.


I)


தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு


தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு


சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு


பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு


பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு


பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு


பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

 

பாடல் :வாலி




II)
                                       

இணங்காதோர் மனம் கூட இணங்கும்

நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்

 
இணங்காதோர் மனம் கூட இணங்கும்


நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்


வணங்காத...ஆ..... வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்


வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்


உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்


உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்


வண்ணக் கோமாதா...

கோமாதா எங்கள் குலமாதா


குலமாதர் நலம் காக்கும் குணமாதா


புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா


வண்ணக் கோமாதா..




பாடல்: கண்ணதாசன்


 அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கால்நடையான பசு/காளைகளுக்கு ,
பெருமை சேர்ப்போம்.
"மாட்டுப் பொங்கலை" மகிழ்வுடன்  கொண்டாடுவோம்.


நன்றியுடன்/நட்புடன்,

புதுவை வேலு


















 

mercredi 14 janvier 2015

தை பிறந்தாச்சி! (சிறுகதை)







இனியன்,
படைப்புலக வீதியில் தனது இலக்கியத் தேரை செலுத்துவதில் மிகுந்த இன்பம் கொண்டு செயல்படுபவன். சமூக அக்கறை மிகுந்த எழுத்துக்கள்தான் அவனது படைப்புகளுக்கெல்லாம் ஆனிவேர். அதோ! அன்றும் அப்படித்தான்! அதிகாலையிலேயே
திடுக்கிட்டு எழுந்தான்
"பொங்கல் திருநாள்" சிறப்பு மலருக்கு தான் எழுதி அனுப்பிய  கவிதை பிரசுரம் ஆகியிருக்குமா? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்து விட்டு  அந்த கவிதையின் நகலை தேடி எடுத்து சத்தமிட்டு படிக்க ஆரம்பித்தான்


பொங்கி எழுக ! பொங்கலே !

ஆனந்தம்  அருந்தமிழாய் உற்றெடுக்க...
தேனருந்தும் வண்டுகளாய்  எம்மக்கள் !
வானுயர்ந்த சோலையாக வளர்ந்திங்கு!
வாழ்த்திடும் பொங்கலை  ஏற்பீரே!!!


முழு கவிதையை படிக்கும் முன்பே ?
அவனது தாய் சுசிலா போட்ட சத்தம் ,  அவனது காதில் வந்து பாய்ந்தது!

இதோ பார்! இனியா,
வெள்ளை பேப்பருக்கு வெள்ளை/கருப்பெல்லாம் அடிச்சி எழுதறதுக்கு பதிலா,  இந்த வீட்டு சுவரை சுத்தம் பண்ணி வெள்ளை அடிச்சாவாவது பார்க்க அழகா இருக்கும். அதை     விட்டுவிட்டு என்னமோ? கவிதை/கதை/கட்டுரையுன்னு? என்று ஏசியவாறே, கடைத் தெருவுக்கு போய் பொங்கலுக்கு கரும்பு வாங்கி வரச் சொன்னாள்.

தாய் சொல்லை தட்டாத தனையனாகி கரும்பு வாங்குவதற்காக புறப்பட்டான்.
வீட்டு வாயிற்படியை விட்டு தாண்டியதும் பக்கத்து விட்டு கணேசன் அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்!
ஏம்பா! எங்கே கடைத் தெருவுக்கா?
ஆமாம்!  அம்மா! கரும்பு வாங்கி வரச் சொன்னாங்க! அதான்  கிளம்பிட்டேன் என்றான்.

இனியா!, தேவை இல்லாமல் ஏம்பா! காசை செலவு செய்யுற ?
அதான்! அந்த அரசியல் பிரமுகர் எல்லார் வீட்டுக்கும் இலவசமாய் கரும்பு கொடுத்து கொண்டு இருக்கிறாரே! பக்கத்து தெரு வரை வந்துட்டாங்க!  அடுத்து நம்ம தெருவுக்குத் தான் வருவாங்க என்று அவர் சொல்லக் கேட்டதும்
 ...
‘’எனிமா சாப்பிட்ட எலி’’ போல் துடித்துத்தான் போனான். ஏனெனில் இலவசம் என்பது
ஊழலுக்கான ஊற்றுக்கண் என்பது அவனது பாடம்.

கடை வீதியின் ஓரத்தில் ஏழை விவசாயி கரும்பு விற்றுக் கொண்டுருந்தார். அவரிடம் சென்று  பொங்கலுக்கான கரும்பினை வாங்கிக் கொண்டு  வீடு நோக்கி நடந்தபோது அவனது கண்ணில்பட்டது குழந்தைவேலு புக் ஸ்டாலில் அவன் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்த, பொங்கல் மலர் புத்தகம் வாயிலில் தொங்கியபடி !


வேகமாக சென்று தனது சட்டை பையிலிருந்து ரூபாய் 50 எடுத்துக் கொடுத்து பொங்கல் மலரை வாங்கினான். பின்பு ஒருவிதமான பதட்டத்துடன் வீடு வந்தடைந்ததும்,  வாசலின் வெளியே அரசியல் பிரமுகர் கொடுத்துவிட்டு சென்ற கரும்பு என்னைத் தாண்டி வருவாயா? என்று ஏக்கத்தோடு பார்த்தபோதும், அதை சட்டை செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்தான். கடையில் வாங்கி வந்த பொருட்களையெல்லாம் கொடுத்த சிறிது நேரத்தில் பொங்கல் வழிபாடு சிறப்பாக நடந்தேறியது.

தாய் கொடுத்துவிட்டு சென்ற சூரியப் பொங்கலை சுவைத்தபடியே, பொங்கல் மலரின் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டியபோது சர்க்கரைப் பொங்கலாக இனித்தது  ஏழாம் பக்கத்தில் அவனது கவிதை:




பனி படர்ந்த போதும் கற்பித்தாய்
பணிவினை எமக்கு கதிரே!
நனிமிகு நன்னாள் இந்நாள் உமக்கு
புனிதமிகு பொன்னாள் கதிரே!


சுடர் தரும் ஆதவன் அருள் ஓளி
படரிருள் போக்கும் கதிரே!
தொடர் இன்பம் நிலைத்திட வேண்டும்
தொடுவானத்தை தொடு கதிரே !


உணவு பஞ்சம் இன்றி இந்தியாவில்
உழவர்களின் உயிராவாய் கதிரே!
தேன்மதுர தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்வாய் கதிரே!



கவிதையை தனது தாயிடம் கொண்டு சென்று காட்டியதும் கட்டி அணைத்து ஆனந்தத்தை அள்ளித் தந்தாள் அவனிடம்.

இனியா உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன் உனக்கு மூன்று கடிதங்கள் வந்திருப்பதை!
அதோ அதை சாமி படத்தின் கீழ் வைத்துள்ளேன் எடுத்துப் பார் ! என்றாள்.

மகிழ்ச்சியுடன் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து படிக்கலானான்.

முதலாவது கடிதம், அவனது படைப்பை பாராட்டி வாசகர் எழுதியது.

இரண்டாவது கடிதம் அவனது படைப்புக்குரிய சன்மானத் தொகைக்கான காசோலை !

மூன்றாவது கடிதத்தை பிரித்தான்!
படித்தான்!....

வணக்கம்!
தங்களது  பணி விண்ணப்பமானது தகுதியின் அடிப்படையில், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.................................................
..........................................................................................நன்றி!


கதை இலாகா பிரிவில் புகழ் பெற்ற அந்த பத்திரிகையில் தனக்கு வேலை வந்த  செய்தியை தாங்கி வந்த ஓலையைக் கொண்டு ஓடினான் தனது தாயிடம்  காண்பிக்க!
இனியாவை பார்த்து,  அவனது தாய் சொன்னாள் மனதில் மகிழ்ச்சி பொங்க!! பொங்க!!






தை பிறந்தாச்சி!
வழி பிறந்தாச்சி!

அடுத்த தை வந்தால் இனியாவுக்கு  டூம் டூம் டூம், கெட்டி மேளம் ! கெட்டி மேளந்தான்!


புதுவை வேலு

mardi 13 janvier 2015

"போகிப் பண்டிகை" (கவிப் பொங்கல்)




 

 



போகிப் பண்டிகை


தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்



புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்
பகைதரும் நட்பு துளியும் வேண்டாம்
வாகை சூட இலவசம் வேண்டாம்
வகைமிகு உணவுகள் வயிற்றுக்கு வேண்டாம்



தீவிரவாதம் தீயில் பொசுங்கிட வேண்டும்
தீண்டாமைத்  தீயை அணைத்திட வேண்டும்
அன்பென்னும் அங்குசம் எடுத்திட வேண்டும்
வன்மிகு யானையை அடக்கிட வேண்டும்



சுத்தம் சுழன்று சுகம் தர வேண்டும்
அசுத்தம் அகன்று விடை பெற வேண்டும்
நித்தம் நீதி நிலை பெற வேண்டும்
சத்தம் "பொங்கலோ பொங்கல்" ஒலித்திடல் வேண்டும்



பஞ்சமின்றி  பாரதம் படைத்திடல் வேண்டும்
லஞ்சமிகு பாரதம் தழைத்திடல் வேண்டாம்
பழையன போக்கிடவே ! புதியன புகுத்திடவே !
அழைப்போம் ! தழைப்போம் !  "போகி" நன்னாளிலே!



வாழ்த்தும் நெஞ்சம்


புதுவை வேலு