samedi 20 février 2016

" தாய் மொழி தினம்".




இந்த இனிய நாளில் நா மகளின் நா வின் நாதத்தை இசைத்து, பெருந்தொண்டாற்றி வரும்
திரு சுப்பு தாத்தா வின் காந்தக் குரலில்,
புதுவை வேலு  இயற்றிய, பாடலை க் கேட்டு
செவிஇன்புற்று மகிழ்ந்தேன்! 


புதுவை வேலு  இயற்றிய,

"உலகத் தாய் மொழி" கவிதையை உலகறிய செய்தமைக்கு திரு சுப்பு தாத்தா அவர்களுக்கு மிக்க நன்றி! 

தமிழ் வாழ்க!




அன்னை அருளிய அன்பு மொழி
விண்ணைத் தாண்டிய ஆசை மொழி
மண்ணின் மாண்பை போற்றும் மொழி
உருவம் வெல்லும் உலகமொழி!


அருகும் மொழி போல் ஆகாது !
பருகும் மொழி போல் பயின்றிடுவோம்
உருகும் உணர்வின் உதய(ம்) மொழி
பெருமை பேசிட செய்திடுவோம்!


தாய் மண்ணே வணக்கம் என்போம்
தாய் மொழி இணக்கம் கொள்வோம்
தாய் மொழி பற்றுக் கொள்வோம்
தமிழ்மொழி கற்று வெல்வோம்!


புதுவை வேலு


"சுவாசமே! தமிழ் நேசமே!"






அன்னை அளித்த அமுத மொழி
கண்ணின்  இமையாய் காக்கும் விழி
மண்ணின் எல்லை மொழியின் வழி
மாண்புடன் சொல் வராது பழி

வாழ்வாங்கு வாழ்ந்திடவே வழி செய்வோம்
வீழாது விண்புகழ் எய்திடவே  செய்வோம்
தாழாது தழைத்து வளர்த்திடவே செய்வோம்
புகழேந்தி மொழி செழித்திட  தவம்செய்வோம்

உலகம் போற்றும் வளர்த் தமிழ்மொழியை
திலகமிட்டு வணங்கிவாழ்த்தினைப் பெறுவோம்
வாய்மொழி வாழி ! திருவாய்மொழி வாழி !
தாய்மொழி  வாழி ! தமிழ் மொழி வாழி !

புதுவை வேலு
















































jeudi 11 février 2016

"கதையல்ல! வெற்றி விதை!"



புலிகள் போடும் யுத்தத்தை
புவியும் உற்று நோக்குதடா!
காசு கொடுத்து  ஓட்டு கேட்காது
கதை சொல்லி ஓட்டு கேட்குதடா!

மாற்றுக் கதை மாறி மாறி
தூற்றிப் பிரசுரம் ஆகுதடா!
பிரச்சாரம் செய்து பேசுகையில்
பீப் சத்தமும் வேண்டுமடா!

வெல்லும் புலி எதுவென்று
காலம் நமக்கு சொல்லுமடா!
தோற்கும் புலி தோல்வியை
ஏற்று ஜனநாயகப் புலி ஆகுமடா!


புதுவை வேலு

பட உதவி: இணையம்