mercredi 31 mai 2017

அமுத மொழியின் ஆனந்த ராகம்




அமுத மொழி பேசி அழைக்கின்றான்
ஆனந்த குழலெடுத்து ராக- ராதாவை!


தடாகம் தகதகக்க தவிக்கின்றாளோ?
தாமரையாய் தளிர்மேனி ராதை!


ராதையின் நெஞ்சமே! - என்றும்
கண்ணனுக்கு சொந்தமே!


'குழலின்னிசை' மயக்கத்தில் மயங்குகிறாள்!
குளிக்கையிலே! குலமகள் ராதை !


இதழின் வழியே இரவு  விடியலை!
இதமாய் இசைக்கிறான் கண்ணன்


பட்டாம் பூச்சிகள் பரவசத்தில் பறந்து
தட்டாது சொல்லும் ராதையின் காதலை!


செவ்விதழில் செந்தேனிசை இசைக்கின்றான்
செம்மணலில் பெய்த மழையாய் காதலை!


-புதுவை வேலு







mardi 23 mai 2017

தமிழ் இலக்கியத்தில்  பக்தியின் பார்வையில்  "உலகம்"


பிரஞ்சு தமிழ் கண்ணதாசன் கழகம்
பதினான்காம் ஆண்டு விழா - 2017




உள்ளத்தில் உள்ளதை உள்ளன்போடு
உலகம் என்னும் தலைப்பில் உரைத்தேன்
இந்நிகழ்வை....
காணொளி வடிவில் காணும் கண்மணிகளுக்கு வழங்கிய நண்பர் கணேஷ் அவர்கட்கு,
எனது நெஞ்சார்ந்த நன்றி!  செவிமடுத்து எம்மை  செம்மையுற  செய்ய வேண்டுகிறேன்.

-புதுவை வேலு