samedi 31 janvier 2015

படம் சொல்லும் பாடம் (யானைப் பாறை)








தாகம் தீர்க்கும் உயிர் அமுதே
தேகம் சிலிர்க்கும் உனைத் தொட்டால்
பாகன் இன்றி நான் வந்தேன்
பகரவோ பாருக்கோர் உண்மை!



பிறையை சூடும் சிவனும் அல்லேன்!
மறையை ஓதும் மாதவனும் அல்லேன்!
இறைவன் படைத்த கற்சிலை நானே!
நீரின்றி அமையாதுலகே கேள்!

புதுவை வேலு


பட உதவி: தினமலர்

jeudi 29 janvier 2015

" இலவசப் பிச்சை இனி வேண்டாம்"



 "சாப்பிட மீன் தராதே மீன் பிடிக்க கற்று கொடு "



   -சீன பழமொழி-


வறுமை! வறுமை என்று! சொல்வதை விட
வறுமையை விரட்ட வழி தேடு!

 




நமது தேசத்தை
நாசமாக்கும் !
ஒரு சொல்
இலவசம்.







இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு...
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தால் ?
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று
இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கி
கல்யாணம் பண்ணி !
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வி
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாசுடன் !
இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது ?

எது வசம் ? நான் செல்வேன் ? சொல் ? அப்பனே!!!











"
மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது."
இலவசம் மூலம் இவர்கள் நம்மை சிந்திக்க விடுவதில்லை !

இனியாவது நாம் சிந்திப்போமா?






இலவசத்தின் இழி குணத்தை பழித்துரைக்கும் ஒரு நீதிக் கதை இதோ:-


" இலவசப் பிச்சை இனி வேண்டாம்"

 



என்ன தான் கஷ்டம் வந்தாலும் சரி,  இலவசமாக யாராவது எதையாவது தந்தால் வாங்கக் கூடாது. அது பிச்சை எடுப்பதற்கு சமம். 

ஒருமுறை நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
சாப்பிட ஏதுமில்லாமல் பலர் இறந்தனர்.

அப்போது,  ஏழு முனிவர்கள் உணவு தேடி எங்கெங்கோ அலைந்தனர். சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை.

ஒருநாள்இறந்து கிடந்த ஒரு மனித உடலைப் பார்த்தனர்.

பசியின் தாக்கத்தால்,  ஆன்மிகம்,  ஜபம்,  தவம் எல்லாவற்றையும் மறந்து, அந்த உடலையே பிய்த்து தின்ன ஆரம்பித்து விட்டனர். அப்போது, அந் நாட்டு அரசன் அவ்வழியே வந்தான்.
 
அவர்களது செயல் கண்டு திகைத்துப் போன அவன்,
முனிவர்களே! 

ஆன்மிகச் செம்மல்களான நீங்களே! இப்படி செய்தால், மற்றவர்கள் கதியென்ன? உங்களுக்கு நான் வேண்டுமளவு அரிசி,  பருப்பு,  காய்கறி வகைகளைத் தருகிறேன். 
என் அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கிறேன்.
நீங்கள் இங்கேயே காத்திருங்கள், என்றான்.

முனிவர்கள் மறுத்துவிட்டனர்.
 
மன்னா! பிணத்தைத் தின்பது என்பது கொடுமையிலும் கொடுமை தான்! ஆனால்,  பசியின் முன் பத்தும் பறந்து போய் விடுகிறது. 

அதற்காக, ! நீ எங்களுக்கு இலவசமாக உணவு தருவதாகச் சொன்னாயே! அவ்வாறு உன்னிடம் பிச்சை வாங்கினால் அது அதை விடக் கொடுமை. பிணம் தின்பதை விட கொடுமையானது ! இலவசத்தை  பெறுவது,  என்றார்.


இலவசங்களை ஒதுக்குவோம். பிச்சை எடுப்பதை ஒழிப்போம்.


புதுவை வேலு


நன்றி: தினமலர்