jeudi 25 janvier 2018

' நலம் பாடும் நல்வாழ்த்து'

'இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்'



-------------------------------------------------------------------------------------------------

பூவிழிக்கண்ணனா புனைகவே-

பூங்கானம்! பூங்கோதை யோடு

பூ வனத்தில்!



பூவிழிக்கண்ணன் பூ மேனி தொட்டு
பூ மாலையிட்டு மகிழ்ந்தால் சிட்டு
புல்லாங்குழலில் பூந்தேனிசை யிட்டு
பூவையோடு வாசித்தானோ? கிட்டு!

-புதுவை வேலு




mercredi 24 janvier 2018

'கோகுலத்தில் கோகுலன்'


கோபியர் கோகுலத்தில்
கொஞ்சும் கோகுலனே!
கோவர்த்தன மலை தாங்கி
ஆயர்களை காத்தவனே!

வாய் அமுத இசைக் கேட்க
தாய் பசுவோடு இளங்கன்று
மேய்ப்பவனை நாடி வருகிறது
மாயவனே! அருள் செய்வாய்!


-புதுவை வேலு



mardi 23 janvier 2018

'வையகத்தில் வைகுந்தன்'



மகுடம் சூடி வந்தான் மாதவன்
குடமேந்திய ராதை முகம் காண!
தடம் பதித்த பாதம் தன் மேலிட்டு
இடம் பிடித்தான் இதயத்தில் இனிதே!


திடமான தின்தோள் மணி வண்ணண்
புடம்போட்ட பொன்மேனியாள் எழிலழகை
வடம் பிடித்து குழல் இசைத்தான்

வையகத்தில் வைரமாய் வைகுந்தன்.

-புதுவை வேலு

lundi 15 janvier 2018

பொங்கல் கவிதை - 'தைமகள் வரவேற்பு'

                          பிரான்சு தமிழ்ச் சங்கம் -2018

                                                         பொங்கல் விழா- 2018


பிரான்சு தமிழ்ச் சங்கம்  பொங்கல் விழா 2018
புதுவை வேலு - புத்தரிசி புது வெல்லமிட்டு
புதுப்பானையில்  புனைந்த பொங்கல்  கவிதை!

 தை மகள் வரவேற்பு

தைப்பொங்கல்
இது!
முன்பனிக் காலத்து
முழு நிலவு!

-------------------------------------------------------------------------------
தென்னகத்து உழவன்
தன் 'அகத்து "நன்றியை"
மண்வாசனை மணக்க...
மகிழ்ந்தளிக்கும் நன்னாள்!

----------------------------------------------------------------------------------
வியர்வை சிந்தி  விடியலை
விரும்பும் உழவர்களை!
இயற்கை இன்பத்தேரில் அழைத்துவரும்!
"இந்திர விழா"  பொங்கல் விழா.
...................................................................
வீசிய விதையின் வேரில் முளைத்த!
வியர்வை பூக்களின்....
இயற்கைத்  திருவிழா
தைப் பொங்கல் திருவிழா!.
....................................................................
துயரங்களை தூர் வாரி
துயர் துடைக்கும்  தூய்மை விழா!
தமிழரின் தாய்மை விழா!
பொங்கல் விழா!.
................................................................................................................................


-----------------------------------------------------------------------------------------------
தமிழர்...
பண்பாடு/கலாச்சாரம்
பறை சாற்றும்- பகலவன்
அறுவடைத் திருநாள்!
.............................................................................
மூங்கில் முழு கரும்பினிலே!
முத்தமிழ்ச் சுவை
நறுஞ் சாறாய் தருபவளே!
தை மகளே!! - நீ! வருக!!!
........................................................................................................................................

"செங்கோலை நடத்துவது  உழவனின் ஏரடிக்கும் சிறு கோலே"
-இது!
கம்பரின் கட்டுத் தறியில் உருவான 
பட்டுச் சேலையின் பள பளக்கும் நூலிழைகள்!
.............................................................................................................................
இயற்கைத் தொட்டிலில் பிறந்த
இலக்கியக் குழந்தையானால் 
இன்று
தை மகள்!.
...................................................................................................................................
செங்கதிரவன் சேவைக்கு! 
செங்கரும்பு பரிசு தந்தவளே!
செழு நன்றியை  செழு மேனியோடு
செந்தமிழில் சொன்னவளே!
.......................................................................................................................
மார்கழியின் உச்சியில் மலர்ந்தவளே!
மாசிக்கு முன்! மாண்புடன் பிறந்தவளே!

மணியோசை சந்தம் பாட! மகிழ்ச்சியில் மாடும் ஓட!
மறவர்கள் வெற்றியைச் சூட!
வெட்சிப் பூ!  சூடி வந்தவளே!
வெட்கத்தின் வேராக  நின்றவளே!
...............................................................................................




மாவிலைத் தோரணங்கள் மயில் ஆட்டம் ஆடி வர!
மாக்கோலம் ஓவியங்கள் குயில் பாட்டு பாடி வர!
தேன்மதுரத் தமிழோசை  தெம்மாங்கு  இசைத்து வர!

பொன் - இஞ்சி - மஞ்சள் கழுத்தோடு!
புதுப் பானையில்.....
புத்தரிசி, புது வெல்லம், புகுந்தபடி
பால் பெருகி!

"பொங்கலோ! பொங்கல்!"
என்று!
பொன் மகள்!
தைத்திருமகள் மகள் வந்தாள்  
இன்று!
.....................................................................................................................................
செங்கரும்பு செவ்விதழில் சிரிக்க!
தேன் சிரிப்பில் தோரணங்கள் புன்னகைக்க!
மங்கலமாய்  மஞ்சள் மேனியொடு!
இஞ்சி இடுப்பினிலே! மகிழ்ச்சிக் குடமேந்தி 
மாதரசியாய் தை மகள் வந்தாள்.
..........................................................................................
உழவரின்...
வித்தக விரல்களுக்கு  விருந்தளிக்க!
விளைச்சலை பரிசாய் தந்தவளே!
தாய் உள்ளம் கொண்டவளே!
தை மகளே -நீ! வருக!
.....................................................................................................................................

ஆனந்தத்தை  அள்ளியருளும் அமுதூற்றாய்!
"சுழன்றும் ஏர்பின்னது உலகம் -அதனால்
உழந்தும் உழவே துணை"
-வள்ளுவரின் வாய்மொழிக் கூற்றாய் வந்தவளே!//
.......................................................................................................................................




கலியுகத்தில்...
வலியைத் தரும் வலியோர்
வலிமை பேச்சும் எழுத்தும்
வழக்கொழிந்து போவதற்குள்...

சங்கத் தமிழ் மாலை!
முப்பதும் தப்பாது படித்துவிட்டு வருக!
"தை மகளே""
மலர்முகம் மருந்தாக மாறட்டும் மானிடர்க்கு
அருந்தமிழோடு ஆனந்த ஆன்மீகம் வளரட்டும்!

அகங்காரம் அடிபணிந்து
ஒற்றுமையில்...
ஓங்காரம் ஓங்கட்டும்!
ஒளி மயமாய்!

-புதுவை  இரா. வேலு

நன்றி!





-------------------------------------------------------------------------------------------------------------