dimanche 29 juin 2014

ஆசை

மனதில் ....
ஆசை என்னும் குப்பைகள் சேர்ந்தால்?
பணம் என்னும்...
எட்டுக்கால் பூச்சி - எளிதில்
எட்டு அடுக்கு  மாடி கட்டும்!!!


மடி சுரந்து பால் தரும்
பசுவின் காம்பினை....- கன்று!
மறப்பது அரிது.


குடியிருந்தக்  கோயிலை
கும்பிட்டு தொழுவதற்கு....
இரு கைகளை- நமக்கு
இறைவன் தருவது இயல்பு

மனிதருள் சிலரோ-அதை
செய்வது அரிது!.....!
அரிதினும் அரிது!.


புதுவை வேலு

dimanche 22 juin 2014

வெற்றி மாலை




மனம் ஒரு ஊஞ்சலடா-அதில்
அமராது ஒரு போதும் உன் ஏஞ்சலடா!
குணம் ஒரு கோவிலடா-அதில்
குடியிருக்க தெய்வம்தான் வேண்டுமடா


ஒருபோதும் கடல் வற்றி போகாது-இது
இயற்கையின்  நீதியடா!
இறைவனடி சேர்ந்த பின்புதான் ...
பாசங்கள்-ஈக்களாக-உன்மீது
மொய்க்குமடா




உன்னித்திடதில் உழைப்பிருந்தால்
பிழைப்புக்கு....
அழைப்புகள் தானாக...
ஓடி வரும்!!


தேன்மதுர தமிழ்மொழிபோல்.
வானுயர வலம்வந்து-வெற்றிமாலை
வாழ்வில்....
சூடி விடும்.




புதுவை வேலு

jeudi 19 juin 2014

உலக கால்பந்து


பிரேசில் மைதானத்தில்...
பல " கால்கள் " - பந்தை
உதைத்து ஆடினாலும்...
வெற்றி என்னும் விந்தை செய்யும்
பந்துக்கு மட்டுமே
சந்தையில் மதிப்பு...
சாகச களிப்பு !

- யாதவன் வேலு

சமர்ப்பணம்

வென்பட்டாடை உடுத்தி
வென்பா பாட்டு எழுதும்
எந்தமிழ்க் கவிஞர்
வாலி......!

செந்தமிழ்ச் செருக்கை
தந்தமிழீற்கு....
எப்பொழுதும் தந்திராத
எந்தமிமிழ்க் கவிஞர்
வாலி....!

எறும்பின் வாயை விட
சின்னது என்னது?
அது-தின்னது......
சொன்னதுகவிஞர்
வாலி......

சந்திரனும் எந்திரனும்
சுத்தி வரும்
கோடம்பாக்கத்து கோல்
கவிஞர் வாலி.....! 

கவியரசு கண்ணதாசன்
இறப்பெய்தி....!
கால் நூற்றாண்டு கடந்தாலும்...!

ஏய் எமனே!
இன்றும்- நீ!
எழுத படிக்கத் தெரியாமலா
இருக்கின்றாய்?
வாலிபக் கவிஞர்
வாலி - என்னும்
வலிமையான புத்தகத்தை
வாசிக்காமலே...
கிழித்து விட்டயே !

ரங்க(ம்) நாதனே....!
சரணம்....! சரணம்....!
 அவதாரப் புருஷர் வாலி !
மீன்டும் பிறப்பெடுத்து
வரனும்... வரனும்...


  - யாதவன் வேலு



dimanche 8 juin 2014

வாழ்வியல் நெறி


துன்பத்திற்கு...
துகிலுடுத்தி அழகு பார் !
அது - உன் வாழ்வில்...
முகிலாய் உருவெடுத்து
இன்பமழை பொழியும்
இல்லையாயின்...
திகிலாகி போகுமடா
மனிதா...
உன் வாழ்க்கை !
                           - யாதவன் வேலு

கண்ணன் கருணை


" கர்மண்யே வாதி காரஸ்த்தே

மா பலேஷீ கதாதன "



கீதையின் நாயகன் கண்ணபிரான் உபதேசித்த உத்தம வரிகள் இவை !

கடமையை செய் ! பலனை எதிர்பார்த்து காத்திருக்காதே ! என்பதுதான் இதன் கருத்துரை. மானிட பிறவி என்பது கிடைப்பதற்கரிய ஒரு மகத்தான அற்புத பிறவி என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.


தற்போதைய சூழலில் இப்பிறவி எடுத்த சிலரது மனங்களில் ஆசை அலைகள் ஆர்ப்பரித்து அலைகடலாய் உருவெடுத்து காணப்படுகிறது. இது வேதனைக்கு வேர் வைப்பதாகவே அமையும் என்பது உலகறிந்த உண்மையாகும் ! மனம் என்னும் கடலில் ஆசை என்னும் அலைகள் தறிக்கெட்டு சீற்றம் கொண்டு பெருங்காற்றோடு பெருக்கெடுத்து ஓடி வருமே ஆயின் நாமெல்லாம் சுழன்று வரும் ஆசை சுனாமிக்குள் சுருண்டு விடுவோம் என்பதை ஓர் நிமிடமாவது நாம் நினைவில் கொண்டால்..." அந்த ஓர் நிமிடம் " அர்த்தமுள்ள நிமிடமாக மட்டுமல்லாமல்... வளமான நம் வாழ்க்கைக்கு நன்மைகளை மட்டுமே நலமான பரிசாக நாம் பெறலாம் ! இது சத்தியம் !!




சத்தியமே ஜெயம் !



- யாதவன் வேலு