mardi 31 mars 2015

"மாத்தியோசி" (சிறுகதை)

  மாத்தியோசி

 








காண்பதெல்லாம் கனவா ? அல்லது நனவா?
அவனது கண்களை அவனாலே நம்ப முடியவில்லை சூர்யாவுக்கு!

எப்படி இந்த ஏழாம் பொருத்தம் ? 
எட்டாவது அதிசயமாக மாறியது?

தனது மனதின் தம்புராவை தாருமாறாய் மீட்டியபடி,
தனது மனைவி ஹேமாவுக்கும், தாய் பாக்கியத்துக்கும் இடையே நடைபெறும் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சிகளை, "லைவாக" பார்த்துக் கொண்டே இருந்தான். சமீபத்திய, உலக கோப்பை கிரிக்கெட் மேட்சில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடிய மேட்சை பார்த்ததை  போல!

அத்தை வாங்க! எங்களோட வந்து உட்காருங்க!
டீவி(TV) போடட்டுமா?

வாணி ராணி சீரியல் வர்ற் நேரம். பாருங்களேன்!

வேண்டாம் ஹேமா!

கரெண்ட் பில் அதிகமாயிடுச்சின்னு சண்டைக்கு வருவியே?

அதெல்லாம் அன்றைக்கு,  இன்னைக்கு ஸ்பெஷல்?
கேள்விக்கு இடமே இல்லை ! என்று சொல்லிவிட்டு ரிமோட் எடுத்து ஆன் செய்தாள் !

ஆஹா!

‘’அவள் பூக்களாலே கோர்த்து வைத்த அன்பின் மாலை!
அவள் உள்ளமெல்லாம் ஓய்வில்லாமல் ஓடும் சாலை!
அவள் தியாகம் என்னும் தீபம் ஏற்றும் விடியற்காலை!
இவள் தைரியத்தின் தேர்வு மட்டும் எழுதும் சேலை!’’

என, சீரியலின் டைட்டில் சாங் கேட்டதுமே பாக்கியம் உண்மையிலேயே
பாக்கியவதியாய் ஆகிதான் போனாள்!

சீரியலின் விளம்பரம் நிகழ்வின்போது, சட்டென்று எழுந்து, சிட்டாக பறந்து சென்று அத்தை குடித்த காபி டம்ளரை கொண்டுபோய், அடுப்படியில் கழுவி வைத்து விட்டு வந்தமர்ந்தாள் ஹேமா!
 
சீரியலின் முடிவில் கதாநாயகியின் குளோசப் ஷாட்டோடு தொடரும்! "போட்டுட்டானே!"
என்று முனுமுனுத்தபடியே, எழுந்தார்கள் மாமியாரும் மருமகளும் ஒருமித்த குரலை ஒலித்தபடி!

இவர்கள் இருவரின் "லைவ்" நிகழ்ச்சிகளை பார்த்து மனதுக்குள் "லைக்" கமெண்ட்ஸ் கொடுத்தபடியே அவனது அறைக்குள் சென்று அமைதியாகி அமர்ந்தான் சூர்யா!

சற்று நேரத்தில்,
ஹேமாவும் வந்துவிடவே!

ஒருநாள் முதல்வராய் இருந்தால்கூட செய்ய முடியாத
சாதனைகளை எப்படி உன்னால் செய்ய முடிகிறது?

எப்படி இந்த அதிரடி ஆட்டம்?

அட்டகாசமான மாற்றம்என்றான், மனைவியை பார்த்து!

அவளது பதில் பளீர் வெளிச்சத்தை பாய்ச்சியது
அறை முழுவதும்!

மாற்றம் இல்லைங்க!

"ஏமாற்றம்"

ஏமாற்றம் !

என்றாள்! 

சுவரில் மாட்டியிருந்த "தேதி காலண்டரை" பார்த்த படியே!

காலண்டரை பார்த்தான் சூர்யா....

இன்று.....

ஏப்ரல் 1

"முட்டாள் தினம்" 

என்றே சிரித்தது காலண்டர்   சூர்யாவை பார்த்து!!!!

புதுவை வேலு




lundi 30 mars 2015

உயர்ந்த மனிதன் உருவான தினம் (Eiffel Tower )

இன்று ஒரு தகவல்



 மார்ச் 31, 1889 அன்று, ஈபிள் கோபுரம் "கஸ்டவ் ஈபிள்" வடிவமைப்பாளர் தலைமையில் நடந்த ஒரு விழாவில் பாரிசில்  மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று!









பிரஞ்சு நாட்டில் (France) உள்ள, ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889,

மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது.

இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு
நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள் இதோ:-
 

1.
கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

2.
கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

3.
இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

4.
இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

5.
வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

6.
இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .
இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

 
இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

7.
இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது.
பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

8.
கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

9.
அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

10.
இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

 

புதுவை வேலு

நன்றி:பட உதவி கூகுள்




மக்களின் மனதில்  உயர்ந்து நிற்பவர் இவரே!




மக்களின் இதயத்தில் இருளிலும் ஒளிர்பவர் இவரே!











 உருவாக்கிய கலைஞர்



                                     கஸ்டவ் ஈபிள்   



 

நன்றி:பட உதவி கூகுள்