கிறிஸ்துமஸ்
திருநாள்
அன்பு தாழ்மை
தூய்மை ஈகை
நான்கு வகை
நற்குணங்களை
நமக்கு
உணர்த்தும் உன்னத நாள்
கிறிஸ்துமஸ்
திருநாள்
இடையருக்கு இறை
தூதர் அறிவித்தார்
இறை இயேசு
இவ்வுலகில் அவதரித்தார்
வானத்தில்
விண்மீன் சாட்சியாய் தோன்றியதே
ஆடிடைக்
கூட்டத்தில் மேய்ப்பர் தோன்றினாரே!
மாட்டுத்
தொழுவத்தில் மரி அன்னை
இறைவன் இயேசுவை
பெற்றெடுத்தார்
அருள் மிகப்
பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்மோடு
இருக்கிறார் வாழ்க!
குழந்தை
இயேசுவின் சொரூபத்தை
குடிலில் வைத்து புனிதம் செய்வோம்
மனிதம் பேணும்
நல்மனிதர் ஆவோம்!
நத்தார் நாளில்
மெழுகாய் மனமுருகி
திருப்பலி செய்து
பரிசுத்தம் ஆவோமாக!
ஆமென்!!!
புதுவை வேலு