jeudi 19 juin 2014

சமர்ப்பணம்

வென்பட்டாடை உடுத்தி
வென்பா பாட்டு எழுதும்
எந்தமிழ்க் கவிஞர்
வாலி......!

செந்தமிழ்ச் செருக்கை
தந்தமிழீற்கு....
எப்பொழுதும் தந்திராத
எந்தமிமிழ்க் கவிஞர்
வாலி....!

எறும்பின் வாயை விட
சின்னது என்னது?
அது-தின்னது......
சொன்னதுகவிஞர்
வாலி......

சந்திரனும் எந்திரனும்
சுத்தி வரும்
கோடம்பாக்கத்து கோல்
கவிஞர் வாலி.....! 

கவியரசு கண்ணதாசன்
இறப்பெய்தி....!
கால் நூற்றாண்டு கடந்தாலும்...!

ஏய் எமனே!
இன்றும்- நீ!
எழுத படிக்கத் தெரியாமலா
இருக்கின்றாய்?
வாலிபக் கவிஞர்
வாலி - என்னும்
வலிமையான புத்தகத்தை
வாசிக்காமலே...
கிழித்து விட்டயே !

ரங்க(ம்) நாதனே....!
சரணம்....! சரணம்....!
 அவதாரப் புருஷர் வாலி !
மீன்டும் பிறப்பெடுத்து
வரனும்... வரனும்...


  - யாதவன் வேலு



Aucun commentaire:

Enregistrer un commentaire