mardi 6 janvier 2015

படம் சொல்லும் பாடம் ("நம்பிக்கை ")



படம் சொல்லும் பாடம்




                                        

நன்றி!
பட உதவி: தினகரன்











இனி!

இந்த இல்லத்தில் இடமில்லை

உங்களுக்கு

என்று!

சில குடும்பங்கள்

வார்த்தைகளை

எரிமலையாக கக்கும் பொழுது!





"வேலை காலி இல்லை"

என்று!

ஓலை ஓடி வந்து

தகுதியான சிலருக்கு!

துன்ப மாலையை

சூடும் பொழுது!







இலக்கிய வாழ்வில்

"புதுக் கவிஞர்களை"

சிலர்!

மரபுக் கவிஞர்களாக

ஏற்க மறுத்து

வெறுத்து ஒதுக்கும் பொழுது!






இணையற்ற காரணங்கள்

இன்னும் பல இருந்தாலும்

இப்படித்தான்

சிலர்!

"நம்பிக்கை "

என்னும்!

காற்றின் துணையோடு

சிறகை விரிக்க

வாய்ப்பு கிடைக்கின்றது!



 புதுவைவேலு


35 commentaires:

  1. அருமை நண்பரே தங்களின் எண்ணக்குவியல் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பா!
      தங்களின் எண்ணங்களை குவித்து
      கருத்தாக பதிவு செய்தீர். மிக்க நன்றி!
      தங்களின் கருத்து வாகனம்தான் விரைந்து வந்து
      முதல் கருத்தினை பதிவு செய்துள்ளது!
      பாராட்டுக்கள்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. உண்மை...சார்..துன்பங்களே சிறகை விரிக்க காரணமாகின்றன

    RépondreSupprimer
    Réponses
    1. தென்றலாக வருகை தந்து தேன்கருத்து நல்கிய நல் உள்ளத்திற்கு
      நன்றி சகோதரி!
      மீனகம் திரட்டித் தரும் படைப்புகள் யாவையுமே நற்சிறப்பு !
      தங்களின் வருகைக்கும், குழலின்னிசையில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. "நம்பிக்கை " யில்தான்

    நானும்

    காற்றின் துணையோடு

    சிறகை விரிக்க

    சிறகை விரித்து
    பறந்து கொண்டு இருக்கிறேன். நண்ரே.......

    RépondreSupprimer
    Réponses
    1. உயர உயர பறந்து உயர்ந்தவர் ஆவீர்!
      தோழரே!
      நம்பிக்கையுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. “நம்பிக்கைச் சிறகு“ அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வலைப் பூ படம்
      வெள்ளை சிறகை விரித்தபடியே
      பறந்து வந்து வெற்றிக் கருத்தினை
      தந்து விட்டு சென்றது.
      மிக்க மகிழ்ச்சி
      குழலின்னிசையில் இணைந்தமைக்கு நன்றி!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான ஒரு நம்பிக்கை கவிதை.
    உண்மை தான் தோல்வி தானே வெற்றிக்கான படி.

    RépondreSupprimer
    Réponses

    1. தோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை முத்தாய்ப்பாக சொன்னீர்கள் சொக்கரே!
      வாழ்த்துக்கள்!
      மீண்டும் வருக! கருத்தினை தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. நம்பிக்கையே வாழ்க்கை என்பதை நயம்பட கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வழி நடத்தும் நல்ல கருத்தினை
      தாங்கள் நாளும் நல்கிட,
      தொடர்ந்து நம்பிக்கையுடன்
      எதிர்நோக்கி காத்திருக்கிறேன் அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. அதில் நம்பிக்கை வைக்கவேண்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
      உண்மை அய்யா!
      தங்களது தொடர் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. நம்பிக்கையுடன் வெற்றி நடை பயிலுவோம் நண்பரே!
      கருத்து நல்கியமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நம்பிக்கைச் சிறகடித்து பறக்க அருமையான ஒரு கவிதை படைத்திருக்கிறீா்கள். நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்கை என்னும் சிறகை விரித்து நாம் பறக்கும் போது
      வானமும் நம் வசம்!
      வசந்தமும் நம் வசம்!
      வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி! சகோதரி!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சில குடும்பங்கள்

    வார்த்தைகளை

    எரிமலையாக கக்குவதற்கு காரணம் புறநிலையா...அகநிலையா கவிஞரே....

    RépondreSupprimer
    Réponses
    1. சில குடும்பங்கள்
      வார்த்தைகளை
      எரிமலையாக கக்குவதற்கு காரணம்
      புறநிலையா...அகநிலையா?
      என்றால்?
      அங்கு நடுநிலை இல்லாது போவதுதான் காரணமாக எனது பார்வைக்கு படுகிறது தோழரே!
      வருகைக்கு மிக்க நன்றி!
      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நம்பிக்கை தான் வாழ்க்கை.
    ஒரு மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலையில்தான் நம்பிக்கை என்னும் வெளிச்சம் எளிதில் தெரியும். நல்ல உதாரணங்கள்.
    அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பினோர் கெடுவதில்லை என்பதை தங்களது ஆனித்தரமான கருத்தால் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி! நண்பரே!
      வருகை தொடரவும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. சிறப்பான கவிதை! நம்பிக்கை விதைக்கும் வரிகள்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளை வாழ்த்தி
      கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி! நண்பரே!

      தொடர் கருத்தினை நல்க வேண்டுகிறேன்.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. உண்மை நண்பரே
    துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன
    நன்றி நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கரந்தையாரே!
      "துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன"
      தங்களது உண்மை கருத்துக்கும்,
      உண்மை நட்புக்கும்,
      உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்!
      வருகை கண்டு மகிழ்ச்சி!
      தொடர் வருகை புரிக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. புறக்கணிப்புகளும் அவமானங்களும் நம்மை செதுக்குகிறதுதான்/

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நம்பிக்கை என்னும் சிலையை செதுக்கி செம்மை படுத்தும் கருத்தினை வடித்தமைக்கும்,
      வருகை புரிந்தமைக்கும் குழலின்னிசையின் நன்றி கலந்த பாராட்டுக்கள்!
      வருக! மீண்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. "வேலை காலி இல்லை"..-----....அதனால் வேலையும் காலி செய்யப்படும்.

    RépondreSupprimer
    Réponses
    1. "உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆசானே!!
      அருமையான விளக்கம்!
      வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. நல்ல வரிகள்! ஐயா! நம்பிக்கைதானே வாழ்க்கை. அடுத்த துளி நொடிகூட நம் கையில் இல்லாத போதும் கூட நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தானே இந்த உலகமே இயங்குகின்றது.

    RépondreSupprimer
    Réponses
    1. "உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆசானே!!
      அருமையான விளக்கம்!
      வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. தூக்கி வீசும் போது தான்
    துணிவும் பிறக்கிறது
    வலி காண
    விழி தேடியலைய
    வழி பிறக்கிறது
    விடிவிற்காய்.

    ஒரு கதவு மூட இன்னொரு கதவு திறக்கும் அல்லவா

    நம்பிக்கை யூட்டும் வரிகள் அருமை அருமை !வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
    Réponses
    1. நம்பிக்கையின் நற்சிறப்பை நவின்றாய் சகோதரி!
      நம்பிக்கு கை கொடுத்த நற்கருத்து உம் கருத்து!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    RépondreSupprimer