'வையகத்தில் வைகுந்தன்'
மகுடம் சூடி வந்தான் மாதவன்
குடமேந்திய ராதை முகம் காண!
தடம் பதித்த பாதம் தன் மேலிட்டு
இடம் பிடித்தான் இதயத்தில் இனிதே!
திடமான தின்தோள் மணி வண்ணண்
புடம்போட்ட பொன்மேனியாள் எழிலழகை
வடம் பிடித்து குழல் இசைத்தான்
வையகத்தில் வைரமாய் வைகுந்தன்.
-புதுவை வேலு
மாதவன் புகழ் பாடும்
RépondreSupprimerமாசற்ற இதயம் அழகு!
இயன்றதை இனிபுற செய்தல் இன்பம்
Supprimerநன்றி நண்பரே!
அருமை நண்பா இரசித்தேன்
RépondreSupprimerநலம்தானே...
கருத்து சொல்ல 'மாருதி'யாய் காரோட்டி வந்த கண்ணனே நன்றி
Supprimerஅழகிய இந்தப் படத்தைப் பார்த்ததுமே கவிதை எழுதத் தோன்றியிருக்கும். அருமை.
RépondreSupprimerஉண்மை!
RépondreSupprimerஉள்ளார்ந்த கருத்து!
உளங்கனிந்த நன்றி! நண்பரே!