dimanche 26 avril 2015

"சின்னக் குருவி! சின்னக் குருவி! செய்தி தெரியுமா?"

"மலை முழுங்கி சின்னக் குருவி"



 
 ஓவியம்:ராஜே  





சிட்டுக்குருவிதவிட்டுக் குருவிரெட்டைவால் குருவிஉழாவராக் குருவி, தூக்கணாங்குருவிஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
.
மலை முழுங்கி சின்னக் குருவியைப் பற்றித் தெரியுமா?
 
அதோ... 
ஒரு பெரிய மலை தெரியுது இல்லையா?  
அதற்குக் கீழ மலையடிவாரத்துல கொன்றை மரம் ஒன்று இருக்கு.
அந்த மரத்துல கூடு கட்டி வாழுது இந்த மலை முழுங்கி சின்னக் குருவி.
அது பொதுவான குருவிதான். தன்னால நாள்தோறும் ஒரு மலையை முழுங்க முடியுதுன்னுமற்றவர்களை நம்ப வைத்துதனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர்தான் மலை முழுங்கி சின்னக் குருவி. 


அந்தக் கொன்றை மரத்துல சின்னக் குருவியைப் போலவே,  
வேறொரு கிளையில மைனா ஒன்றும் கூடு கட்டி வாழ்ந்தது. 
ஒரே மரத்தில இருக்கிறதாலஇரண்டு பேரும் நண்பர்கள் ஆனார்கள்.
ஒவ்வொரு நாளும் மைனா எங்கே போனதோஅந்த இடத்தோட வளத்தையும்அழகையும்மிக அழகாகச் சின்னக் குருவியிடம் வந்து சொல்லும்.
அடிப்படையில சின்னக் குருவி ரொம்ப சோம்பேறி. ரொம்ப தூரம் பறந்து போய் இரையைத் தேடாது. பக்கத்திலேயே போய்விட்டு கூட்டுக்குத் திரும்பிவிடும். வந்து கூட்டுக்குள் உறங்கும். தாகம் எடுத்தால் மலையடிவாரத்துல ஓடும் நதியில் தண்ணீரைக் குடிக்கும். ஆனா, மைனாகிட்ட நான் ரொம்ப தூரம் போனேன். அங்கே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன்னுரொம்ப பொய் சொல்லும்.

சின்னக் குருவி சொல்லும் பொய்களை உண்மை என்றே நம்பியிருந்தது மைனா. 

குருவி நண்பனே! எனது நண்பர்கள் வெளியூரிலிருந்துஅருகில் உள்ள ஊருக்குச் சுற்றுப்பயணம் வருகிறார்கள். ஆகையால் நான் அங்கு செல்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகிவிடும்”  என்று கூறிவிட்டு புறப்பட்டது மைனா.

மைனா திரும்பி வருவதற்குள் சின்னக் குருவி
மலை முழுங்கி சின்னக் குருவி’ 
என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டது. 
அது சுற்றுவட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

ஒருவாரம் கழித்து, திரும்பி வந்த மைனா
என்ன குருவி நண்பனே! உனது பெயர் சின்னக் குருவிதானே! ஆனால், எல்லோரும் மலை முழுங்கி சின்னக் குருவி என்று அழைக்கிறார்களேஎன்று ஆவலாகக் கேட்டது. 


ஹா....! ஹா...!என்று சிரித்த சின்னக் குருவி,
 “என்ன மைனாவே! என்னுடைய பலத்தை அறியாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாயே?
நீ! என் நண்பன் என்பதால் உன்னை சும்மா விடுகிறேன். 
வேறு யாராவது கேட்டிருந்தால் அவ்வளவுதான்” 
 எனக் கோபமாகக் கூறியது. 

நண்பனே! இதிலே கோப்படுவதற்கு என்ன இருக்கிறது. 
நாம் இருவரும் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறோம். 
ஆகையால் உனது பலம் எனக்கும் தெரியும். அதுமட்டுமல்ல நம்மைப் போன்ற சிறிய பறவைகளால் அவ்வளவு பெரிய மலையை அல்ல... மடுவைக்கூட முழுங்க இயலாதேஎன்றது மைனா.

அப்படியா? நீ நம்ப வில்லைதானே? சரி, நாளைக்குக் காலை அந்த நதிக்கு வா.. நான் மலையை முழுங்குவதைக் காணலாம்என்றது சின்னக் குருவி.
சரி!என்று கூறிவிட்டு உணவுத் தேடிப் பறந்தது மைனா.
மறுநாள் காலை மலையடிவாரத்தில் உள்ள நதிக்கு இரண்டும் வந்தன.
அப்போது சூரியன் மலைக்குப் பின்னால் ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் மலையின் நிழல் நீரில் விழுந்திருந்தது.

மைனாவே! இதோ பார்! இந்த நீரில் மலையின் அச்சு தெரிகிறது அல்லவா?” எனக் கேட்டது சின்னக் குருவி.
ஆமாம், தெரிகிறதுஎனப் பதில் சொன்னது மைனா.
இப்போது பார்எனத் தன் மெல்லிய அலகால் கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடித்துக் கொண்டிருந்தது சின்னக் குருவி.
நேரம் ஆக ஆக சூரியன் மேலே போனது. மேலேச் செல்ல செல்ல மலையின் நிழல் நதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு, “மைனாவே! பார்த்தாயா? நான் நீரைக் குடிக்க குடிக்க மலையின் நிழல் குறைந்து கொண்டே வந்தது. அந்தக் குறைந்த மலையின் நிழல் என் வயிற்றுக்குள் சென்றுவிட்டதுஎன்றது சின்னக் குருவி. 

இப்போது ஹா...! ஹா...!என்று சிரித்தது மைனா. 


என்ன? மைனாவே! ஏன் சிரிக்கிறாய்?”  எனக் கேட்டது சின்னக் குருவி
என்ன சொல்வது குருவி நண்பனே! மலை அதன் இடத்தில் தான் இருக்கிறது. நீ தாகத்துக்கு தண்ணீர் குடித்தாய். சூரியனின் ஒளியால் அதன் நிழல் நீரில் படிந்திருக்கிறது. சூரியன் தன் வேலையைச் சரியாகச் செய்வதால், அதன் ஒளி மேலே செல்ல செல்ல மலையின் நிழலும் குறைந்தது.
அப்படியானால் சூரியன் தானே மலையின் நிழலை முழுங்கி இருக்க முடியும்? நீ முழுங்கி விட்டதாகத் தவறாக நினைத்துக்கொண்டுபட்டப் பெயரை வேறு சூட்டிக் கொண்டாயே...என விளக்கியது மைனா.

ஓ.. நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேனா?” எனச் சொல்லி தலை கவிழ்ந்தது சின்னக் குருவி. 

குருவி நண்பனே! கவலைப்படாதே. நாம் நம் கடமையில் சரியாக இருந்தால், அதுவே சிறப்பு தான். 

இது எல்லோருக்கும் இயல்பாக நடக்கக்கூடிய தவறுதான்என்றது மைனா.

மைனாவே! என் தவறை எனக்குப் புரிய வைத்ததற்கு நன்றிஎன்றது சின்னக் குருவி.

சரி! வா... நண்பனே... இருவரும் இணைந்தே உணவுத் தேடிப் பறப்போம்என அழைத்தது மைனா.
மிகுந்த உற்சாகத்தோடு, வானில் பறக்க ஆரம்பித்தது சின்னக் குருவி.


உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் பாருங்கள்...
 அந்த சின்னக் குருவி ஏதும் வந்திருக்கிறதா? என்று! 
முடிந்தால்???



உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் குருவிகளுக்காகத் தானியங்களையும், நீரையும் வையுங்கள்.”

குற்றம் நீங்கி சுற்றம் பேணும்
குருவியின் குணத்தை போற்றுவோமே
!


பகிர்வு: 

புதுவை வேலு 

நன்றி: தி இந்து/சித்திரக்கதை/(KKR)



22 commentaires:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. முதல் இடுகையிட்டு
      சிந்தையாலே விந்தை செய்து
      சிறப்பான கருத்தினை பொழிந்தமைக்கு
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆழமான கருத்து, அழகான நடையில். பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. முத்தாய்ப்பாய் அமைந்தது முனைவர் அய்யாவே!
      உமது உன்னத கருத்து!
      உவகையில் உள்ளம் உற்றாய் உலவட்டும்.
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான கருத்து நண்பரே
    விட்டின் மாடியில் குருவிகளுக்காக
    தானியங்களையும் தண்ணீரையும் வைப்போம்
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. சிட்டுக் குருவிக்கும் உணவு படைத்து உயர்வடைவோம்,
      கணிதம் தந்த மனித நினைவுக்கு வாழ்த்துகள்!
      நண்பரே! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா ?உன்னால் நானும் தெளிந்தேன் :)

    RépondreSupprimer
    Réponses
    1. பகவானே (ஜி) தெளிவுறும்போது,
      பக்தர்களும் தெளிவு பெறுவார்கள்
      என்பதுதானே?
      நடைமுறை இயல்பு!
      அழகான கருத்து, ஆழமான உட்குறிப்பு!
      நன்றி பகவான் ஜி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    அனைத்தும் அருமை.. அருமை. நல்ல கருத்தை இறுதியில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  6. வாருங்கள் நண்பரே!
    வணக்கம்,
    "குற்றம் நீங்கி சுற்றம் பேணும்
    குருவியின் குணத்தை போற்றுவோமே!"
    இந்த இனிய வரிகளை
    அழகுற ஆராதனை செய்து போற்றிய
    பெருவுள்ளமிக்க கவிஞர் ரூபன் அவர்களுக்கு
    அன்பின் நன்றி!
    பணி சிறக்க வாழ்த்துகள்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. அணைத்தும் அருமை..த.ம.5

    RépondreSupprimer
    Réponses
    1. அனைத்தும் அருமை என்றே பாராட்டிய தாயுள்ளம் மிக்க பண்பினை வணங்கி வரவேற்கின்றேன் தோழரே!
      வாக்கொடு அமைந்த வலிமைமிகு கருத்திற்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நல்ல கருத்துள்ள கதையை தேடி, அதற்கு தகுந்தால் போல் படத்தை தேர்வு செய்து கொடுத்த விதம் அழகு.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. காலத்திற்கேற்ற கதையாய் அமைந்ததால்
      கண்ணில் தெரியும் கதையாய் பகிர்ந்தேன் நண்பரே!
      பளீச்சிடும் பாராட்டுதலுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம் சகோதரரே.

    இனிமையான கடமையின் சிறப்பை உணர்த்தும் நல்லகதை. படிக்கும் போதே சிட்டுக்குருவியாய் என் மனமும் ஆகாயத்தில் பறந்தது. இந்த வகை குருவிகள் கண்களில் படுவதே இப்போது அரிதாக உள்ளது. தங்கள் சொல்படி குருவிகளை பேணுவோம். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    RépondreSupprimer
    Réponses
    1. தவறை உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்தால்?
      வாழ்வில் உயர்வே உறுதுணையாகும்!
      வருகை உயர்வினை தந்தது சகோ!
      தொடருங்கள்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தி இந்துவிலும் படித்தேன்! சிறப்பான சிறுவர் சித்திரக் கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லதை நாடி வரும் நண்பரே
      நல்லதொரு சித்திர சிறுகதையை
      மீண்டும் படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு சிறக்கட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நல்லதொரு கதை விட்டீர்கள் ஸாரி சொன்னீர்கள் நண்பரே.... சில நேரங்களில் நானும்கூட குருவி போல நினைத்ததுண்டு இனி அப்படி நினைக்க கூடாது 80தை உணர்த்தி விட்டீர்கள்.
    எனக்கு நானே ஆறு மனமே 6

    RépondreSupprimer
    Réponses
    1. குருவியாய் நினைத்தாலும், தாங்கள்! தற்போது பொங்கி வரும் தமிழ் அருவியல்லவா நண்பரே!
      6 மனமே 6 என்று ஆறுதலை தந்தாலும்,
      குழலின்னிசை 7 இசை இசைத்து, இன்பத்தை பெற்று விட்டது! அது போதும் அன்பரே!
      போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நண்பா!
      நன்றி! நல்ல உள்ளத்திற்கு!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. முடிந்தால் அந்தச் சிறிய குருவிக்கு தண்ணீர் வைப்போம்....

    சிறப்பான பதிவு நண்பரே.

    RépondreSupprimer
  13. வாருங்கள் நண்பரே!
    வணக்கம்,
    "குற்றம் நீங்கி சுற்றம் பேணும்
    குருவியின் குணத்தை போற்றுவோமே!"

    அன்பின் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer