இன்பத்தின் இனிய வாசல்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheVX0uI_ubt9zD1YRTUhiqNpZzJNzEMYNSUF3MFAl0H0ko9GrTACkRRcmIRWb4WBnFfM63yMqteU9AhkmvGXkhWHoPPAlwnmJm6awf5YHlBf5S8wA58-rO1dHjWmpSC-ZmH99u5Cw4EoE/s640/18920641_882034355270590_7875199906898522739_n%255B1%255D.jpg)
இன்பத்தின் இனிய வாசல்! திறந்திடு மகளே!
தாயும் சேயும் பலா வடிவில்
வாழ்வின் தத்துவத்தை
முட்களால்....
முகாரி பாடுகின்றனரோ?
அன்னை அணைப்பை
ஆராய்ந்தால் தெரியும்?
உள்ளிருக்கும் சுளைகள்
இனிமை யென்று!
இன்பத்திலும் துன்பத்திலும்
பொறுத்திரு மகளே....
இன்பத்தின் இனிய வாசல்!
திறந்திடும் மகளே!
-புதுவைவேலு
படம் விளைவித்த கவிதை
RépondreSupprimerபலாப்பழம் போல் மிக இனிமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Supprimerசுவைதரும் கனிபோல் இனித்தது ஐயா
தங்களது வருகையும், கருத்தும்
நன்றி
அபூர்வமான இந்தப் படமும், அதற்கேற்ற தங்களின் கவிதையும் அருமையோ அருமை. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
RépondreSupprimerதிறமையின் திறவுகோல்
Supprimerதிறந்தது நம்பிக்கை கதவினை!
தங்களது கருத்துக்கு இனிய நன்றி ஐயா
அருமை...
RépondreSupprimerவலைச் சித்தர் வருகை தந்தது பெருமை
Supprimerநன்றி நண்பரே!
படத்திற்கேற்ற கவி அருமை நண்பா.
RépondreSupprimer
Supprimerஇடம் பொருள் ஏவல்
அறிந்த நண்பா!
உமது வருகைக்கும்
பாராட்டுதலுக்கும் நன்றி
இயற்கையின் அதிசயத்துக்கு அழகிய வரிகளின் அணிவகுப்பு.
RépondreSupprimerஅழகிய வரிகளுக்கு
Supprimerஅணிகலன் பூட்டி
அழகு செய்தமைக்கு நன்றி
படத்திற்கு ஏற்ற
RépondreSupprimerஅருமையான எண்ணங்கள்
பலா தந்த பா அருமை. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer