mardi 2 février 2016

"அறிஞர் அண்ணாவின் கருத்தோவியம்"


தமிழ்
" தமிழ் இனியது, அழகியது, ஆற்றல் மிக்கது, வற்றாத ஊற்றான சொற்செறிவும் , பொருட்செறிவும், நாகரிக நயமும், நேர்த்தியும் கொண்டது. அது தொன்மையானது, தூயது! என்றும் அழியாத வியத்தகு சீரிளமைத் திறன் உடையது!".
உலகம்
" எல்லாப் புத்தகங்களையும் விட  சிறந்த புத்தகம் இந்தப் பரந்தஉலகம்தான் உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு கிடையாது

ஆட்சி
"மலர் விரிந்தால் மணம்வீசத்தான் செய்யும்.
 மேகங்கள் கூடினால் மயில் ஆடத்தான் செய்யும்.
தென்றல் வீசினால் குளிர்ச்சி ஏற்பட்டுத்தான் தீரும்.
அவை போல ஆட்சி அலங்கோலமானால் மக்கள் கண்டிக்கத்தான் செய்வர்".
சட்டம்
"சட்டம் ஒரு இருட்டறை ! அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு! அந்தப் பிரகாசமான விளக்கை ஏழையால பெற முடிவதில்லை!"


 நற்சிந்தனை
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
பகிர்வு:
புதுவை வேலு

"வெற்றிக் கூட்டணி"


படம் சொல்லும் பாடம்



நிரந்தரத் தலைவராய்
நீடித்து நிற்பவரின்...
தந்திர தேசத்து
மந்திர வாசகம் இதுதானோ?

கூட்டணி சேர்க்கை
கூப்பாடு ஒருபுறம்!
பாதிக்கு பாதி
பங்கீடு மறுபுறம்

பத்தாண்டுக்கு ஒருமுறை
தந்திரத்தை மாற்றுவது
போதாது! பலிக்காது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
ஐயமின்றி மாற்றுபவரே!

வெற்றித் தலைவராய்
வெளிச்சத்துக்கு வருவார்!

புதுவை வேலு

பட உதவி: இணையம்

samedi 30 janvier 2016

"ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்" (நீதிக் கதை)



ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம்



இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது.

கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு
குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடுஎன்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். 
இனிமேல் இது என் வீடு. 
நான் இதை விட்டுப் போகமாட்டேன்என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.

சிட்டுக்குருவியோகூட்டில் மகிழ்ச்சியாய் இருந்தபடி கூவிக் கொண்டிருந்தது!






திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்த!
ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து,  
கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. 
கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து,  
அப்புறம் தலைமட்டும்
கடைசியாக அலகு 
என்று தெரிந்துகொண்டே வந்து
கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. 

தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே பின்பு, மூச்சடைத்து இறந்து போனது.


அடுத்தவர் இடத்துக்கும் / பொருளுக்கும் ஆசைப்பட்டால் இதுதான் கதி!

நீதி: உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! தத்துவத்தை போதிக்கும் நீதி 

பகிர்வு
புதுவை வேலு
பட உதவி: இணையம்

jeudi 28 janvier 2016

"இலக்கியக் கருத்தரங்கு - காணொளிக் காட்சி"


                              (இதோ உங்களது உயர்வான பார்வைக்கு ....)

பிரான்சு தமிழ்ச் சங்கம் நடத்திய 'பொங்கல் விழா 2016' -ல்
பங்கேற்று இலக்கிய உரையாற்றி, அந்த இலக்கிய நிகழ்வை பதிவாக
'குழலின்னிசை'யில்  வெளியிட்டு இருந்தேன் அல்லவா?


அந்த நிகழ்வினைத் தொடர்ந்து  "வாராது வந்த மாமழை போல்"

இன்று 28/01/2016,  முகநூல் மற்றும் யு -டியூப் -ல், தொழில் நுட்பத் திறனோடு, அந்த நிகழ்வின் அனைத்து பேச்சாளர்களின் காணொளிக் காட்சியை, மனமுவந்து வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார் நண்பர் திருகணேஷ் அவர்கள்.
ஒரு நாள் நிகழ்வோடு நின்று போகாமல்,

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுதற்கு துணை நின்ற
" Gan Prod Plus "
நிறுவனர் திரு.கணேஷ் அவர்களுக்கும்,





"பிரான்சு தமிழ்ச் சங்கம்" நிர்வாகிகள் அனைவருக்கும்,

 குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது.


புதுவை வேலு


"தானம்"


இனிக்க! இலவசம்!



நாத்திகர் நட்டநடவு பயிர் செழித்து

தோத்திரம் தோகை விரித்து விருந்தாய்!

பாத்திரம் படைத்தின்று இராமனுஜராய்

சரித்திரம் பேசுதய்யா! சாமானியரே !



திருப்பதி ஏழு மலையார் ஊடகத்துக்கு

திருவாரூரார் தரும் இலவசம் இனிக்கட்டும்!


புதுவை வேலு



(DMK Leader & Writer Karunanidhi Gave Ramanujar Serial for Free to Tirupati Channel)





நன்றி:(you tube)
தினமலர்