vendredi 3 juillet 2015

'குட்'டு வாங்கிய தீர்ப்பு



                                   (நகைப்புக்கு மட்டுமே....இந்த நகைச்சுவை பதிவு!)    

ஒரு நாட்டில், ரஷ்யர், சீனர் இந்தியர், மூவரும் "ஹெல்மெட்" அணியாது வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் அவரவர்  தலையில் 30 குட்டுகள் குட்ட  நீதிபதி உத்தரவிட்டார்!
அத்துடன் அவர்கள் கேட்கும் 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என தீர்ப்பும் கூறப்பட்டது.

முதலில் வந்த ரஷ்யர்
எனது குட்டுகளை  15ஆக, குறைக்க வேண்டும் என கோரினார்.
இதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக, எனது தலையில் 2 தலையணை வைத்து கட்ட வேண்டும் என்றும் கூறினார் அவ்வாறே செய்யப்பட்டது.
'ரஷ்யர்' வலியில் இருந்து விடுதலை ஆனார்!!!

அடுத்து சீனர்…..

குட்டுகளை முப்பதிலிருந்து பத்தாக குறைத்து 10 குட்டு மட்டும் குட்ட வேண்டும் என்றார்.
இரண்டாவதாக இனி "ஹெல்மெட்"டை  நீங்கள் எங்கள் நாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும் என்றார்.
2 கோரிக்கைகளை ஏற்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
'சீனர்' சிறிய வலியோடு, தன் நாட்டு தொழில் வர்த்தகத்தை விரிவு படுத்தினார்.

அடுத்து இந்தியர்.

எனக்கு வழங்கப்பட்ட 30 குட்டுகளை 300 ஆக உயர்த்துங்கள் என்றார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன்!!!
இதற்கு ஒப்பு கொண்டனர்.

இரண்டாவது கோரிக்கை என்ன? என்று கேட்கப்பட்டது!

"ஹெல்மெட்" அணிந்த எனது தலையில்......
எனக்கு தண்டனை கொடுத்த நீதிபதியை 300 குட்டு!
குட்ட சொல்லுங்கள் என்றார்.

தீர்ப்பை நிறைவேற்றும் போது,  "ஹெல்மெட்" அணிந்து,  தீர்ப்புக்கு  தலை வணங்கினார்! -"இந்தியர்"

புதுவை வேலு



 

23 commentaires:

  1. சிரிப்பு வெடிதான் இந்தியர் நினைத்து!ஹீ

    RépondreSupprimer
    Réponses
    1. சிரிப்பு வெடியிலும் நகைச்சுவை வெடிக்கான மருத்தை வைத்திருந்த இந்தியரை நினைத்து சிரித்தீர்களா நண்பரே!!
      தங்களது வருகையை குழலின்னிசை இன்முகத்துடன் வரவெற்கின்றது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. ஆகா! என்றே அன்புடன், அழகுடன் ரசித்தமைக்கு நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. இன்னும் ஒரு ஹா! போட்டு இருந்தால் ஓஹோ ஆகியிருக்கும் அல்லவா? நண்பரே!
      தொடர்க!!!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. குட்டும்
    குட்டுக்குப் பாதுகாப்புமா?
    நல்லாயிருக்கு
    உங்கள் நகைச்சுவை!

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச்சுவை பதிவை நாடி வந்து ரசித்தமைக்கு பாவாணர் அய்யாவுக்கு குழலின்னிசையின் நன்றி!
      தொடர்க!!!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. குட்டுத் தீர்ப்புக்கு GOOD பதிலடி....!

    RépondreSupprimer
  6. G.M.B அய்யாவிடமிருந்து குட்டு வாங்கும்படியான பின்னூட்டம் இன்று குழலின்னிசைக்கு
    வர வில்லையே என்னும்போது மகிழ்ச்சியே!
    வருகைக்கு நன்றி அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. நகைச்சுவை, அதே சமயம் நறுக்கென்று செய்தி. நன்றி.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லதை பாராட்டி கருத்தாய் பகிர்ந்தளிக்கும் வணக்கத்திற்குரிய முனைவர் அய்யாவுக்கு நன்றி!
      தங்களது அழைப்புக்கு நன்ற்! நிச்சயம் வருகிறேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. lஉங்கள் நகைச்சுவை நிறைந்த எழுத்தை படித்து நானும் ஏன் குடும்பத்தாரும் மகிழ்ந்தோம். நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. சந்தோஷத்தில் நல்ல சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்துவதே!
      முதல் முறை குழலின்னிசை பதிவுக்கு கருத்து சொல்லி உள்ளீர்கள் என்றே
      நம்புகிறேன். தொடர வேண்டுகிறேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. tணக்கம்
    ஐயா
    ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கவிஞரின் வருகையும், கருத்தும் மகிழ்வை அள்ளித் தருகிறது.
      பாராட்டுதலுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஹெல்மெட் அணிந்த இந்தியரின் தலையில் 300 குட்டுகள் குட்டிய நீதிபதியின் மணிக்கட்டு என்ன ஆச்சு ? :) ..... இந்தியர் புத்திசாலி !

    ’குட்டி வாங்கினாலும் மோதிரக்கையால் குட்டு வாங்க வேண்டும்’ என்ற ஒரு பழமொழிக்கு ஏற்ப, சீனாக்காரரின் நாட்டுப்பற்றும், நாட்டின் தொழில் அபிவிருத்திக்கான தொலை நோக்குத் திட்டமும் பாராட்டப்பட வேண்டியதாகவே உள்ளது.

    நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நகைச் சுவை பதிவை பாரட்டியமைக்கு நன்றி வைகோ அய்யா !
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. ஹாஹா.... :)

    நல்லாத்தான் கேட்டு இருக்காரு!

    RépondreSupprimer
  12. யாரை சொல்கிறீர்கள் நண்பரே? இந்தியரா? சீனரா? ரஷ்யரா?
    பூடகமான கருத்தை ரசித்தேன் நண்பரே!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. ஹஹாஹஹஹ்ஹ் அதுதாங்க இந்தியர்!!!!

    RépondreSupprimer
  14. சந்தோஷத்தில் நல்ல சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்துவதே!
    நகைச் சுவை பதிவை பாரட்டியமைக்கு நன்றி அய்யா !
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer