lundi 13 octobre 2014

இதய வாசல்




இதய வாசல்

இங்கு
அன்பின் அடையாளம்
அகப்பட்டுக் கொண்டது
அகம் அருளும்
இரு கைகளிலே!

மனதால் கட்டிய
மகிழ்ச்சி மண்டபத்தை
மனிதா!



மண்ணாக பார்க்காதே

பெண்ணாக இருந்தாலும்
ஆணாக இருந்தாலும்
ஒன்றாக
பார்த்தலே போதும் 

இந்த இதயம்
கடலிலும் கரையாது
கார் இருளிலும் மறையாது

அகம் பேசும் சுகம்

இது தானடா!

புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire