mardi 20 octobre 2015

"அருள் அமுதம் தருவாய் கலைமகளே!"




முல்லை புன்சிரிப்பால் வெள்ளைக் கமலத்தில்

கொள்ளை  இன்பம்  கொண்டு  இருப்பாள்

குலவுகவி  மேவும்  நல் உள்ளத்தில்

நிலவும் நித்யகல்வி  தந்து நிற்பாள்



அறுபத்து நான்கு ஆய கலைகளை

கூறும் சுவடி கரத்தில் ஏந்திநிற்பாள்

பண்ணும் பரதமும் புனலாய் புவியில்

பரவிட நிறைகல்வியை தந்து நிற்பாள்



வீணை மடியேந்தி தேனை இசையாய்

அனைவருக்கும் அருளிய கலைவாணி!

தூய உள்ளத்து துன்பம் துடைத்தெறிந்து

ஆயகலையரசியே அகிலத்தில் வா நீ !!!

புதுவை வேலு

26 commentaires:

  1. சிறப்புக் கவிதை மிக மிக அருமை
    இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய சொல்லெடுத்து இதம் தரும் கருத்தினை வாழ்த்தாக தந்தீர்கள் அய்யா!
      மனமெல்லாம் மணக்கட்டும் மதுரைத் தமிழ்!
      நன்றி!
      இனிய 'கலைமகள் கல்வித் திருநாள்' வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிற்ப்பான கவிதை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. சிறப்புமிகு நாளில்,
      விருப்பத்திற்கு விருந்தாக அமைந்த
      கல்வி அன்னையின் புகழ் துதிக்கு தூண்டுதல் தரும் கருத்தினை தந்தமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. கலைமகளுக்கு படைத்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. கல்வியாளர் புகழ் கருத்து 'கல்வி அரசி'யின் அருள் பெற்று செழிக்கும் புவியில் சிறந்து. நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இனிய கலை மகள் தின நல் வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. 'குலவுகவி மேவும் நல் உள்ளத்தில் நிலவும் நித்ய கல்வி'யை
      கருத்தாய் தந்த கரந்தையார் அவர்களுக்கு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான கவிதை! இனிய விஜய தசமி வாழ்த்துக்கள் நண்பரே!!!

    RépondreSupprimer
    Réponses
    1. தூய உள்ளத்துடன் துன்பம் துடைத்தெறிந்து அருங்கருத்தை அமுதாய் தந்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அழகான கவிதை. இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!
    த ம 4

    RépondreSupprimer
    Réponses
    1. பண்ணும் பரதமும் புனலாய் புவியில்
      பரவிட நிறைவுடன் பணி செய்து சிறந்திட
      வாழ்த்துகள் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. கலைமகளின் மீதான கவிதைஅருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. வீணை மடியேந்தி தேனை இசையாய்
      அனைவருக்கும் அருளிய கலை மகள் வரும் நாளில்,
      முனைவர் அய்யா தரும் அருங்கருத்து மகிழ்ச்சி மலராய் மனதில் மலரும்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கவிதையை மிகவும் இரசித்தேன் நண்பரே... வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தனை சிறகடித்து வந்து கலைமகள் கவிதையை இன்பமுடன் ரசித்தமைக்கு நன்றி நண்பரே!

      நட்புன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வெள்ளைக் கமலத்தில், முல்லை சிரிப்பில், நித்ய நிறைகல்வியின் சுவடியை கையில், வீணையை மடியேந்தி, ஆயகலையரசியின் அன்னை கலைசெல்வியே, வர்ணிக்க வார்த்தையில்லை தம் சிந்தனை பெரிது வேலு அவர்களே சிறப்பு மிகு கவிதை.
    துன்பம் துடைத்தெறிந்து நாம்தான் வாழ்தாக வேண்டும்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. துன்பம் துடைக்கும் வரிகளை
      இன்பமுடன் இசைந்து, கருத்துப் பேழைக்குள் புகுந்து
      புத்துணர்வுமிகு கருத்தினை இதயக் கமலத்தில் மலரச் செய்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வாருங்கள் தோழரே!
    கல்விக்கு சிறப்பினை தந்தீர்கள்
    கடாட்சம் கருணைக்கு நன்றி!
    ஏழினை தந்து கலைமகள் கீர்த்தியை வாழ்த்தியமைக்கு நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. வணக்கம்
    ஐயா
    கலைமகளுக்கு புனைந்த பா வெகு சிறப்பு ஐயா த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  12. கலைமகள் சிறப்பு நாளில்
    கவின்மிகு கருத்தினை தந்த
    கவிஞருக்கு குழலின்னிசையின்
    தமிழிசை நன்றி!
    மிக்க நன்றி கவிஞரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. கலைமகள் துதி நன்று!

    RépondreSupprimer
  14. கலைமகள் துதியினை
    மதி நிறை புலவர் அய்யா
    மாண்புமிகு சொல்லெடுத்து
    பாராட்டியமைக்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  15. சிறப்பான கவிதை வரிகள்

    வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வீணை மடியேந்தி தேனை இசையாய்
      அனைவருக்கும் அருளிய கலை மகள் வரும் நாளில்,
      அய்யா தரும் அருங்கருத்து மகிழ்ச்சி மலராய் மனதில் மலரும்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer