mardi 1 juillet 2014

பணிவு

 

 

அறிவுப் பெட்டகம் நிறையப் பெற்றோர்
செறிவுடன் செய்தால் அவரே - கற்றோர்

பரிவுடன் பங்கை பகராமல் விற்றோர்
நரியின் தங்கைக்கு அவரே - பெற்றோர்

பாசமும் நேசமும் நிறையப் பெற்றோர்
வாசமிகு வம்சத்திற்கு அவரே உற்றோர்

நற்றமிழிற்கு தூணாக நிற்கப் பெற்றோர்
கற்றமிழ் ஈட்டும் புகழிற்கு அவரே - ஏற்றோர்!

புதுவை வேலு


Aucun commentaire:

Enregistrer un commentaire