lundi 29 septembre 2014

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"சிறுகதை

சிறுகதை




"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"

 

 

ஏங்க ! அவசரமா எங்கே கிளம்பிட்டீங்க?
எதுவா இருந்தாலும் இந்த காபியை குடிச்சிட்டு கிளம்புங்க! ராதாவின் குரல் அடுப்படியைத் தாண்டி ஹாலுக்குள் அடியெடுத்து வைத்தது.
வேற எங்க போவப் போறேன். உனக்கு தெரியாதா? எல்லாம் அருனோட புத்தக வெளீட்டு விழாவுக்குத்தான். இப்ப நான் கிளம்பினாத்தான் சரியான நேரத்துக்கு
போக முடியும். முரளியின் "கட் அண்ட் ரைட்" பதிலைக் கேட்டு திகைத்து நின்றாள் ராதா.
நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க! அவர்தான் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பல!
பக்கத்துவீட்டு மதி கேட்டும் வேண்டாமேன்னு கொடுக்கல, அப்படி இருக்கும்போது அவசியம் நீங்க போய்த் தான் தீரணூமா? இது தேவைதானா?
இதோ பார் ராதா! பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க பெண் கல்யாணத்துக்கு நமக்கு பத்திரிகை வைக்கல. கடைசி நேரத்தில் பத்திரிகை தீர்ந்துபோச்சுன்னு, வெறும் வாய் வார்த்தையாய் கூப்பிட்டதற்கு,  நம்ம பிள்ளைகள், அந்த கல்யாணத்துக்கு போக வேண்டாம்னு சொல்லியும், என்னையும் கூட்டிக்கிட்டு  நீ போகல!
அதுவந்துங்க, நமக்கும் பிள்ளைகள் இருக்கு! அதுங்க நல்லதுக்கு வந்து வாழ்துத்துவதற்கு  நான்கு பேர் வேணும் இல்லீங்களா ? அதனால்தான்!
சபாஷ்! அதுமாதிரிதான் இதுவும்.
அருணுக்கு அழைப்பிதழ் கொடுக்க இஷ்டம் இல்லை! சரி விடு, ஆனால் அங்கு வரும் நான்கு நல்ல மனிதர்களின்  நல்ல கருத்தை கேட்கலாம் இல்லையா?
புத்தகம் என்பது அறிவுக்கு தொடர்புடையது. சரஸ்வதி தேவி குடியிருக்கும் வீடு!
அங்கு போகலானா எப்படி? அதனால்தான் புறப்படுகிறேன். அதுமட்டுமல்ல நம்ம குழந்தைகளுக்கும் "நீயா நானா"என்கிற மனப்பான்மை மனதை விட்டு மறைய வேண்டும் இல்லையா?
ராதாவின் முகத்தில் அறிவு வெளிச்சம் மின்னியது ஒரு வேளை?




சரஸ்வதி (பூஜை) தேவி வந்து விட்டாளோ?

புதுவை வேலு

1 commentaire:

  1. .
    .
    .
    அறிவுப் பசி கொண்டவர்கள்
    அழியாத இடத்திற்கும் சென்று
    செவிக்கு சற்று உணவு வாங்கி,
    உண்டு வருவார்கள்.
    .
    .
    .

    RépondreSupprimer