dimanche 21 septembre 2014

இசை மூர்த்தி நாயகன் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்




இசை மூர்த்தி நாயகன் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்


இன்பம் தரும் இசையே
நீ !
எங்கே போனாய்?
மதி அமர்ந்து ஆட்சி செய்த
உன் வித்தக விரல்கள் எங்கே?
உன் !
புகழ் மோதிரம்  மட்டும்
பூமிக்குள் புதையாமல்
பூ- போல் மணக்கிறதே - அதை
நினைக்கையில் மனம் தான்
கண்ணீர் வடிக்கிறதே!


பொன் விழா காணும் முன்பே
விண்விழா காண- காலன்
உன்னை கவர்ந்து சென்று விட்டானோ?
குறையொன்றும் இல்லாத
மறை மூர்த்தி மாதவனே!
மண்ணில் நிறைவான வாழ்வு வாழ
இசை மூர்த்தி நாயகனை 

மீட்டு மீண்டும் இங்கே 
கொண்டு வந்து சேர்த்து விடு

புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire